For Daily Alerts
Just In
ஜெ. மீதான சொத்துக் குவிப்பு வழக்கு மார்ச் 22ம் தேதிக்கு ஒத்திவைப்பு
பெங்களூர் தனி கோர்ட்டில் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது. இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.
அப்போது சாட்சிகள் யாருமே ஆஜராகவில்லை. இதையடுத்து தனி கோர்ட் நீதிபதி, வழக்கு விசாரணையை வருகிற 22ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
இதற்கிடையே, இந்த வழக்கை தள்ளுபடி செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் ஜெயலலிதா தாக்கல் செய்துள்ள மனு நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.
Comments
Story first published: Thursday, March 18, 2010, 14:54 [IST]