திடீரென இன்று சென்னை திரும்பிய ஜெயலலிதா-பட்ஜெட் கூட்டத்தில் பங்கேற்பு?
இதனால் பட்ஜெட் கூட்டத்தில் அவர் பங்கேற்கக் கூடும் என்று கருதப்படுகிறது.
கடந்த மாதம் 24ம் தேதி போயஸ் தோட்டம் இல்லத்தில், தனது பிறந்த நாளை கொண்டாடிய ஜெயலலிதா 27ம் தேதி தோழி சசிகலாவுடன் கொடநாடு எஸ்டேட்டுக்கு கிளம்பிப் போய்விட்டார்.
பென்னாகரம் இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டு திமுக, பாமக ஆகியவை மிகத் தீவிரமாக பிரச்சாரத்தை ஆரம்பித்த நிலையில் ஜெயலலிதா தனது கட்சியின் சார்பில் அன்பழகன் போட்டியிடுவார் என்று அறிவித்துவிட்டு கொடநாடு போய்விட்டார்.
இந் நிலையில் வரும் 22, 23 ஆகிய தேதிகளில் பென்னாகரத்தில் ஜெயலலிதா பிரச்சாரம் மேற்கொள்வார் என்று அறிவிக்கப்பட்டது. இதற்காக 20ம் தேதி வாக்கில் அவர் சென்னை வருவார் என்று கருதப்பட்ட நிலையில், அவர் இன்றே சென்னை திரும்பினார்.
கொடநாடு எஸ்டேட்டில் இருந்து கோவைக்கு காரில் வரும் ஜெயலலிதா அங்கிருந்து தனி விமானம் மூலம் பகல் 1 மணிக்கு சென்னை வந்தார்.
புதிய சட்டசபையில் நாளை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டவுள்ளதால் அதில் ஜெயலலிதா பங்கேற்கலாம் என்று தெரிகிறது.