நித்தியானந்தா செக்ஸ் காட்சி வீடியோவை ஒளிபரப்ப தடை கோரிய மனு தள்ளுபடி
சென்னை: சாமியார் நித்தியானந்தா, நடிகை ரஞ்சிதா ஆகியோர் இடம் பெற்றிருந்த வீடியோ காட்சிகளை ஒளிபரப்ப தடை விதிக்கக் கோரியும், அதை காட்டிய மீடியாக்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது.
நித்தியானந்தாவும், ரஞ்சிதாவும் அந்தரங்கமாக இருக்கும் வீடியோ காட்சிகளை சன் டிவி, நக்கீரன் ஆகியவை முதன் முதலில் ஒளிபரப்பின. பின்னர் பல்வேறு பத்திரிகைககள், தொலைக்காட்சிகள், இணையதளங்களில் இது ஒளிபரப்பு செய்யப்பட்டது.
இதை எதிர்த்து சென்னை கே.கே.நகரைச் சேர்ந்த வைரசேகர் என்பவர் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அதில், நித்தியானந்தாவுடன் நடிகை ரஞ்சிதா இருக்கும் படுக்கையறை காட்சிகளை நக்கீரன் உட்பட 26 மீடியாக்கள் வெளியிட்டுள்ளன.
இதனால் பள்ளிக்குழந்தைகள் மனது கெட்டுப்போகிறது. அந்த 26 மீடியாக்களும் செய்தது ஒழுங்கு முறை சட்டத்திற்கு எதிரானது. அதனால் இந்த ஊடகங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியிரு்நதார்.
இந்த மனு இன்று தலைமை நீதிபதி கோகலே, நீதிபதி தனபாலன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது.
மனுவை விசாரித்த நீதிபதிகள், நித்தியானந்தா விவகாரம் தொடர்பாக அவரே வேண்டுமானால் வழக்கு தொடராலம். அவர் பெரும்புள்ளியாக இருக்கிறார். அவர் வழக்கு தொடர்வதில் நியாயம் இருக்கும்.
ஆனால் நீங்கள் வழக்கு தொடர்வது தேவையற்றது. அவருக்கு ஆதரவாக செயல்படுவது போலிருக்கிறது. அதனால் இந்த வழக்கை தள்ளுபடி செய்யப்படுவதாக கூறி வழக்கை டிஸ்மிஸ் செய்து உத்தரவிட்டனர்.