நித்தியானந்தா செக்ஸ் காட்சி வீடியோவை ஒளிபரப்ப தடை கோரிய மனு தள்ளுபடி
சென்னை: சாமியார் நித்தியானந்தா, நடிகை ரஞ்சிதா ஆகியோர் இடம் பெற்றிருந்த வீடியோ காட்சிகளை ஒளிபரப்ப தடை விதிக்கக் கோரியும், அதை காட்டிய மீடியாக்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது.
நித்தியானந்தாவும், ரஞ்சிதாவும் அந்தரங்கமாக இருக்கும் வீடியோ காட்சிகளை சன் டிவி, நக்கீரன் ஆகியவை முதன் முதலில் ஒளிபரப்பின. பின்னர் பல்வேறு பத்திரிகைககள், தொலைக்காட்சிகள், இணையதளங்களில் இது ஒளிபரப்பு செய்யப்பட்டது.
இதை எதிர்த்து சென்னை கே.கே.நகரைச் சேர்ந்த வைரசேகர் என்பவர் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அதில், நித்தியானந்தாவுடன் நடிகை ரஞ்சிதா இருக்கும் படுக்கையறை காட்சிகளை நக்கீரன் உட்பட 26 மீடியாக்கள் வெளியிட்டுள்ளன.
இதனால் பள்ளிக்குழந்தைகள் மனது கெட்டுப்போகிறது. அந்த 26 மீடியாக்களும் செய்தது ஒழுங்கு முறை சட்டத்திற்கு எதிரானது. அதனால் இந்த ஊடகங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியிரு்நதார்.
இந்த மனு இன்று தலைமை நீதிபதி கோகலே, நீதிபதி தனபாலன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது.
மனுவை விசாரித்த நீதிபதிகள், நித்தியானந்தா விவகாரம் தொடர்பாக அவரே வேண்டுமானால் வழக்கு தொடராலம். அவர் பெரும்புள்ளியாக இருக்கிறார். அவர் வழக்கு தொடர்வதில் நியாயம் இருக்கும்.
ஆனால் நீங்கள் வழக்கு தொடர்வது தேவையற்றது. அவருக்கு ஆதரவாக செயல்படுவது போலிருக்கிறது. அதனால் இந்த வழக்கை தள்ளுபடி செய்யப்படுவதாக கூறி வழக்கை டிஸ்மிஸ் செய்து உத்தரவிட்டனர்.
-
Personality Test: படத்துல 3 ரூம் இருக்கு! எந்த அறை பிடிச்சிருக்குனு சொல்லுங்கள்! சர்பிரைஸ்! -
தென் மாவட்ட பயணிகளுக்கு ஷாக் கொடுத்த ரயில்வே! எழும்பூரில் இருந்து இந்த ரயில்கள் புறப்படாது -
சென்னையின் மிக முக்கிய இடத்தை.. அப்படியே செதுக்க போறாங்க.. களமிறக்கப்பட்ட இரும்பு ராட்சசன்! -
Gold Price: மீண்டும் எகிறிய தங்கம் விலை.. ஒரே நாளில் தாறுமாறாக உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம் -
ரூ.45 லட்சம் நூதன மோசடி.. சென்னை தம்பதி மீது வழக்கு பதிவு! -
கோவை டூ தென்காசி வரை.. அடுத்த 3 மணி நேரம் பிச்சு உதறப்போகுது கனமழை.. உஷார் மக்களே! -
இடி, மின்னலுடன் வெளுக்க போகுது மழை! இன்று 4 மாவட்டங்களில் கனமழை அலர்ட்! கோடை வெயிலுக்கு ஜில் அப்டேட் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம்












Click it and Unblock the Notifications