For Daily Alerts
Just In
கடைகளில் மாமூல் வாங்கிய மாஜி 'டிஸ்மிஸ்' ஏட்டு
திருநெல்வேலி: போலீசார் பெயரில் பெட்டிக்கடைகளில் மாமூல் பெற்ற மாஜி போலீஸ் ஏட்டுவை நெல்லை போலீசார் கைது செய்தனர்.
திருநெல்வேலி மாவட்டம் குருவிகுளம் காவல் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றியவர் சத்தியமூர்த்தி (52). இவர் முறையாக பணி மேற்கொள்ளாததால் கடந்த ஆண்டு இவரை மாவட்ட நிர்வாகம் பணி நீக்கம் செய்தது.
இதனையடுத்து, தற்போது இவர் நெல்லை தாழையூத்து சங்கர் நகர் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இந்நிலையில், இவர் நெல்லை டவுன் பகுதியில் உள்ள பெட்டிக்கடைகளில் மாமூல் வசூலித்து உள்ளார்.
இவரது நடவடிக்கையால் சந்தேகமடைந்த பெட்டிக்கடை உரிமையாளர்கள் சிலர் டவுன் காவல் நிலையத்திற்கு இது குறித்து தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், சத்தியமூர்த்தி கைது செய்தனர்.
Comments
Story first published: Thursday, March 18, 2010, 12:25 [IST]