கூவம் ஆறு சீரமைப்பு- சிங்கப்பூர் நிறுவனத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம்

சென்னையில் மட்டும் சுமார் 18 கிமீ தூரம் ஓடும் கூவம் ஆற்றை சுத்தப்படுத்தி தூய்மையான நீர் நிலையாக்க தமிழக அரசு திட்டமிட்டது.
கூவம் ஆற்றில் ஆக்கிரமிப்புகளை அகற்றுதல் மற்றும் தூர்வார்தல் போன்ற பல்வேறு பணிகளுக்காக கடந்த 2008ம் ஆண்டில் ஆயிரத்து 260 கோடி தமிழக அரசு ஒதுக்கியிருந்தது.
கூவத்தை நவீன முறையில் சீரமைப்பது தொடர்பான விவரங்களை சேகரிக்க துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் உயரதிகாரிகள் கடந்த 2009ம் ஆண்டு சிங்கப்பூர் சென்று வந்தார்கள்.
சிங்கப்பூரில் கல்லாங் என்ற ஆறு சீரமைக்கப்பட்ட விதம் குறித்து நேரில் அறித்து பல்வேறு விவரங்களை சேகரித்து முதல்வர் கருணாநிதியிடம் ஆறிக்கையை சமர்ப்பித்தனர்.
இதைத் தொடர்ந்து கூவம் உள்ளிட்ட ஆறுகளை சீரமைக்க சென்னை நதிகள் ஆணையம் அமைத்த தமிழக அரசு, சீரமைப்பு பணிகளில் தொழில்நுட்ப ஆலோசனைகள் பெற சிங்கப்பூர் அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொள்ள முடிவு செய்தது.
சிங்கப்பூர் வெளியுறவு, வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சகங்களின் கீழ் செயல்படும் சிங்கப்பூர் கூட்டுறவு நிறுவனம் தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தும் மேற்கொள்ள சிங்கப்பூர் அரசு அனுமதி அளித்தது.
இதன்படி, சிங்கப்பூர் கூட்டுறவு நிறுவனத்தின் தலைமைச் செயல் அலுவலர் அல்போன்சஸ் சியா தலைமையில் அதிகாரிகள் குழு சென்னை வந்துள்ளது.
முதல்வர் கருணாநிதி, துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் முன்னிலையில், சிங்கப்பூர் கூட்டுறவு நிறுவனம் மற்றும் சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளைகளுக்கு இடையே சென்னை நிதிகள் சீரமைப்பு பணிகளுக்கான ஆலோசனை வழங்குதல் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது.
இதில், சிங்கப்பூர் கூட்டுறவு தலைமைச் செயல் அலுவலர் அல்போன்சா சியா மற்றும் சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளையின் உறுப்பினர் செயலர் பணீந்திர ரெட்டி ஆகியோர் கையெழுத்திட்டனர்.
இந்த ஒப்பந்தத்தின் படி, சென்னை நதிகள் சீரமைப்பு குறித்து முழுமை திட்டம் தயாரித்தல், திட்ட மேலாண்மை மற்றும் செயல் அலுவலர்கள், பொறியாளர்கள் திறனை மேம்படுத்துதல், சீரமைப்புப் பணிகள் போன்றவற்றில் சிங்கப்பூர் கூட்டுறவு நிறுவனம் ஆலோசனைகளை வழங்கும்.
முதல்கட்டமாக கூவம் நதி சீரமைப்பு தொடர்பாக அக்குழுவினர் தமிழக அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினர். கூவம் நதியின் பல்வேறு இடங்களையும் நேரில் பார்வையிட உள்ளனர்.
-
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
Sundar C: ஏங்க கனிமொழி மட்டும் தூத்துக்குடிக்காரங்களா? நானும் மதுரைக்காரன்தான்! சுந்தர் சி விமர்சனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: விருச்சிக ராசிக்கு 9 இல் குரு.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
டாக்டர் படிப்பை முடித்த அனிதா சம்பத்.. உருக்கமாக சொன்ன தகவல்! கடைசியில் இப்படி ஆகிடுச்சே! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன -
“திருச்சுழியில் போட்டியிட விருப்பமனுவே தராத என்னை அனுப்பிட்டாங்க” அதிமுக வேட்பாளர் ராஜவர்மன் குமுறல் -
Heavy Rain: கனமழை பிச்சு உதறும்.. கோவை, நீலகிரி, தேனியில் இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கும்.. வானிலை எச்சரிக்கை












Click it and Unblock the Notifications