மத்திய அரசு ஊழியர்களுக்கு 8% அகவிலைப்படி உயர்வு!
Subscribe to Oneindia Tamil
டெல்லி: மத்திய அரசு ஊழியர்களுக்கு 8 சதவீதம் அகவிலைப் படி உயர்த்தப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது. நடப்பாண்டு ஜனவரி மாதத்தில் இருந்து முன் தேதியிட்டு இந்த உத்தரவு அமல்படுத்தப்படும்.
உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் விலை உயர்வை கருத்தில் கொண்டு அரசு ஊழியர்களுக்கு அகவிலைப் படியை உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது.
இந்நிலையில் இன்று டெல்லியில் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இது தொடர்பாக விவாதிக்கப்பட்டது.
விலைவாசி மற்றும் அரசு ஊழியர்களின் நலன் ஆகியவற்றை கருத்தில் கொண்டு 8 சதவீதம் அகவிலைப்படியை உயர்த்தி வழங்க அமைச்சரவையில் ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது.












Click it and Unblock the Notifications