கர்நாடகம்-நித்தியானந்தா மீது இயற்கைக்கு மாறான செக்ஸ் உறவு வழக்கு!
பெங்களூர்: சாமியார் நித்தியானந்தா மீது கர்நாடக போலீஸார் கற்பழிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
நித்தியானந்தா மீது தமிழகத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் சமீபத்தில் கர்நாடக காவல்துறைக்கு மாற்றப்பட்டன. இதுதொடர்பான கோப்புகள் வந்து சேர்ந்து விட்டதாக கர்நாடக மாநில கூடுதல் டிஜிபி ஏ.ஆர்.இன்ஃபேன்ட் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் இன்ஃபேன்ட் உத்தரவின் பேரில் தற்போது பிடாதி போலீஸார், தமிழகத்தி்ல் பதிவான அதே பிரிவுகளின் கீழ் புதிதாக வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
மத உணர்வுகளை புண்படுத்துதல், கற்பழிப்பு, இயற்கைக்கு மாறான செக்ஸ் உறவு வைத்துக் கொள்ளுதல், மோசடி, மிரட்டி பணிய வைத்தல், குற்ற சதி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் நித்தியான்நதா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
விரைவில் தமிழில் உள்ள அனைத்து ஆவணங்களும் கன்னடத்தில் மொழிபெயர்க்கப்படும். அதன் பின்னர் சட்ட நடைமுறைகள் தொடங்கும் என ராமநகர மாவட்ட எஸ்.பி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications