அகதி பெண் பாலியல் பலாத்கார விவகாரம்-உண்மை கண்டறியும் குழு விசாரணை!
கரூர்: கரூர் அருகே இலங்கை அகதி முகாமைச் சேர்ந்த பத்மாதேவி என்ற பெண்ணை போலீசார் பாலியல்ரீதியாக துன்புறுத்தியதாக கூறப்படும் புகார் குறித்து வழக்கறிஞர் புகழேந்தி என்பவர் தலைமையில் உண்மை கணடறியும் குழு விசாரணை நடத்த உள்ளது.
கடந்த 17.05.2007ம் தேதி கரூர் காந்தி கிராமம் அருகே ஒரு வீட்டில் ராம்பிரகாஷ் என்ற சிறுவனையும், தீபிகா என்ற சிறுமியையும் மர்ம கும்பல் ஒன்று கழுத்தை அறுத்து கொடூர கொலை செய்ததது.
இந்த வழக்கில் கரூர் அருகே உள்ள ராயனூர் இலங்கை அகதி முகாம்மைச் சேர்ந்த குமார், பாண்டி, வழிப்பறி பாண்டி ஆகிய மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.
இந் நிலையில், கடந்த மார்ச் 7ம் தேதி குமாரின் மனைவி பத்மாதேவியை போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்றுவிட்டு வீட்டில் விட்டனர்.
ஆனால், அன்று மாலையே பத்மாதேவி தனது வீட்டில் உடலில் மண்ணெண்ணை ஊற்றி தீ வைத்துக் கொண்டார். உடல் முழுவதும் கருகிய நிலையில் அவர் கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
இந் நிலையில், பத்மாதேவியை போலீசார் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதால் தான் அவர் தீக்குளித்ததாக புகார் எழுந்தது.
இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த வழக்கறிஞர் புகழேந்தி என்பவர் தலைமையில் உண்மை கண்டறியும் குழு நாளை இலங்கை அகதி முகாமில் விசாரனை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது. இந்தக் குழுவில் தமிழ் ஆர்வலர்கள், சமூக ஆர்வலர்கள் இடம் பெற்றுள்ளனர்.
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
பாஜக - தவெக கூட்டணி உருவாகிறதா? திமுகவை வீழ்த்த பம்பர் ஆஃபர் 60 சீட், மெகா பொறுப்பு? டெல்லி பலே மூவ் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
"இந்த" 2 பேருக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்.. டி20 உலக கோப்பை வெற்றிக்கு பின் கம்பீர் சொன்ன வார்த்தை -
கருணாஸ் பாஜகவுக்கு விட்ட சவால்.. "இந்து மதமே கிடையாது" அதிர்ச்சியில் உறைந்த இந்து முன்னணி! -
நாலாபக்கமும் நெருக்கடி.. பாஜக கூட்டணிக்கு வருகிறாரா விஜய்? நயினார் நாகேந்திரனே கொடுத்த பதில் -
பாஜக கூட்டணி வர்றீங்களா? இல்ல கடையை சாத்துறீங்களா? விஜய்க்கு டெல்லி டெட்லைன்.. சிபிஐ பிடியில் தவெக!












Click it and Unblock the Notifications