தொழில் துறைக்காக 4,000 ஏக்கர் 'நில வங்கி' - மேற்குவங்க அரசு ஏற்பாடு!
கொல்கத்தா: நிலம் கையகப்படுத்தல் தொடர்பான பிரச்னைகளைத் தவிர்க்க தொழில் துறைக்கென்று பிரத்தியேகமாக சுமார் 4 ஆயிரம் ஏக்கர் நிலம் அடங்கிய 'நில வங்கி' (Land Bank) ஒன்றை மேற்குவங்க அரசு முன்கூட்டியே தயார்படுத்தி வைத்துள்ளது.
கொல்கத்தாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் தொழில் துறையினர் மத்தியில் இத்தகவலை முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா தெரிவித்தார். ,
மேலும் அவர் கூறுகையில், "'தொழில் நடவடிக்கைகளுக்காக நிலங்களை கையகப்படுத்தும் போது பல்வேறு எதிர்ப்புகள் கிளம்புகின்றன. குறிப்பாக எதிர்க்கட்சிகள் இப்பிரச்னைகளை அரசியலாக்கி குளிர்காய்கின்றன.
எனவே தொழில் துறைக்கு என பிரத்தியேகமாக 4 ஆயிரம் ஏக்கர் நிலத்தை அரசு தயார்படுத்தி உள்ளது. இதனை நில வங்கி என்ற திட்டத்தின் கீழ் கையகப்படுத்தியுள்ளோம். துர்காப்பூர், அசான்சால், பான்குரா, புரூலியா ஆகிய இடங்களில் இந்த நிலம் உள்ளன.
இவற்றை அரசு கையகப்படுத்தும் போதும் சிறு சிறு பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. எனினும் முந்தைய பிரச்னைகளை விட இவை சமாளிக்கக் கூடிய அளவே உள்ளன.
இவற்றில் பெரும்பாலானவை விவசாய சாகுபடிக்கு தகுதியற்றவை என்பதாலும் பிரச்னை ஓரளவு குறைந்தது.
நிலம் வழங்கியவர்களுக்கு இழப்பீடு வழங்குவது, அந்தந்த சூழலைப் பொறுத்து அமையும். நிலம் வழங்கியவர்களின் குடும்பத்தினர் ஒவ்வொருவருக்கும் பணி வாய்ப்பு கட்டாயமாக வழங்கப்படும்.
இனி தொழிற்சாலைகளுக்கு நிலம் தேவைப்படுவோர் இந்த வங்கி மூலம் நிலங்களைப் பெற்றுக் கொள்ளலாம்...' என்றார்.












Click it and Unblock the Notifications