தேவநாதன் வழக்கு: குற்றப் பத்திரிகை தயாராவதில் மகா லேட்!

காஞ்சீபுரம் மச்சேஸ்வரர் கோவிலில் அர்ச்சகராக பணியாற்றியவர் தேவநாதன். கோவில் கருவறையில் இவர் நடத்திய செக்ஸ் லீலைகள் பக்தர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இது தொடர்பாக தேவநாதன் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். ஆனால் தற்போது தேவநாதன் மீதான வழக்கு தள்ளாடிக்கொண்டிருக்கிறது. பொதுவாக ஒரு வழக்கில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்த 90 நாட்களுக்குள் போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும். இதன் மூலம் குற்றவாளிகள் ஜெயிலில் இருந்து ஜாமீனில் விடுதலையாவதை தடுக்கலாம்.
ஆனால் இந்த வழக்கில் 110 நாட்களுக்கு மேல் ஆகியும் இன்னும் குற்றப்பத்திரிகை தயாரிப்பு பணி கூட தொடங்கவில்லை.
உரிய நேரத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாததை காரணம் காட்டி தேவநாதன் நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்துவிட்டார். இந்த 3 மாதத்தில் தேவநாதனும் தனது ஸ்டைலை மாற்றிவிட்டார். பஞ்சகச்சத்தை துறந்து பேண்ட்-சட்டைக்கு மாறி விட்டார். தலைமுடியை நேர்த்தியாக வெட்டி தொப்பி மற்றும் கண்ணாடி அணிந்துகொண்டு கோர்ட்டில் ஆஜராகிறார்.
குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாததற்கு போலீசார் தரப்பில் பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகின்றன.
தேவநாதனின் ஆண்மை பரிசோதனை அறிக்கை இன்னும் கிடைக்கவில்லை. செக்ஸ் காட்சிகள் அடங்கிய லேப்- டாப் தடயவியல் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதன் முடிவும் கிடைக்கவில்லை.
மேலும் தேவநாதனுடன் பழகிய 4 பெண்களின் மருத்துவ பரிசோதனை அறிக்கையும் கிடைக்கவில்லை என்று போலீஸார் தெரிவித்து வருகின்றனர்.
தேவநாதனையும் அவருக்கு பின்னணியில் செயல்படும் கும்பலையும் காப்பாற்றவே இந்த தாமத நாடகம் என்றும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications