நலமுடன் இருப்பதாக பிரபாகரன், பொட்டு அம்மான் கடிதம்?

கடந்த மே மாதம் 18ம் தேதி நடந்த சண்டையில் பிரபாகரன் கொல்லப்பட்டதாக இலங்கை ராணுவம் கூறியது, வீடியோ பசத்தையும் காட்டியது.
ஆனால், அது பிரபாகரன் போலவே உருவ அமைப்பு கொண்ட ஒருவரது உடல் என்று புலிகள் தரப்பு மறுத்தது.
இந் நிலையில் கடந்த ஜனவரி மாதம் விடுதலைப் புலிகள் தங்கள் அதிகாரப்பூர்வ இணைய தளத்தில், பிரபாகரன் நல்ல உடல் நலத்துடன், பாதுகாப்பான இடத்தில் இருக்கிறார். உரிய நேரத்தில் அவர் வெளியில் வருவார் என்று அறிவிப்பு வெளியிட்டது.
பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரா, இல்லையா என்ற சர்ச்சை உலகம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்ட நிலையில் புலிகளின் உளவுப் பிரிவுத் தலைவரான பொட்டு அம்மான் குறித்து தொடக்கம் முதலே உறுதியான தகவல்கள் இல்லை.
பொட்டு அம்மான் உயிருடன் இருக்கிறார் என்று அவ்வப்போது தகவல்கள் பரவி வருகின்றன. இன்டர்போலும் பொட்டு அம்மானை தேடி வருவதாக இணையத் தளத்தில் அறிவித்துள்ளது. இது புலித் தலைவர்கள் அனைவரையும் கொன்று விட்டோம் என்று கூறி வரும் சிங்கள அரசுக்கு தலைவலியைக் கொடுத்துள்ளது.
இதையடுத்து பொட்டு அம்மான் குறித்து நீண்ட அமைதி காத்து வந்த இலங்கை, போரின் கடைசி நாட்களில் அவர் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டார் என்று சமீபத்தில் அறிவித்தது.
இந் நிலையில் நாங்கள் நல்ல உடல் நலத்துடன் பத்திரமாக இருக்கிறோம் என்று பிரபாகரன், பொட்டு அம்மான் பெயரில் உலகம் முழுக்க உள்ள புலி ஆதரவாளர்களுக்கு கடிதங்கள் வர ஆரம்பித்துள்ளன.
அத்தகைய ஒரு கடிதம் தமிழக அரசியல் தலைவர் உள்பட 5 பேருக்கு வந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதை அவர்கள் தான் எழுதினார்களா அல்லது அவர்கள் பெயரில் வேறு யாராவது அனுப்பினார்களா என்பது தெரியவில்லை.
-
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ்












Click it and Unblock the Notifications