பென்னாகரம்: இன்று மாலை 5 மணியுடன் பிரசாரம் ஓய்கிறது- கருத்துக் கணிப்புகள் வெளியிட தடை

Subscribe to Oneindia Tamil

Karunanidhi-Ramadoss-Jayalalitha-Vijayakanth
பென்னாகரம்: பென்னாகரம் தொகுதிக்கான இடைத் தேர்தல் பிரசாரம் இன்று மாலை 5 மணியுடன் ஓய்ந்தது. அதன் பிறகு கருத்துக் கணிப்புகளை வெளியிடக் கூடாது என்று தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா உத்தரவிட்டுள்ளார்.

பென்னாகரம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் சனிக்கிழமை நடைபெறுகிறது. இதில், திமுகவின் இன்பசேகரன், பாமகவின் தமிழ்க்குமரன், அதிமுகவின் அன்பழகன், தேமுதிகவின் காவேரி வர்மன் உள்பட மொத்தம் 31 பேர் போட்டியிடுகிறார்கள்.

இடைத் தேர்தலுக்கான பிரசாரம் படு தீவிரமாக நடந்து வந்தது. திமுக சார்பில் முதல்வர் கருணாநிதி நேற்று பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் உள்ளிட்டோரும் கலந்து கொண்டு பிரசாரம் செய்துள்ளனர்.

அதிமுகவுக்காக அதன் பொதுச் செயலாளர் ஜெயலலிதா தீவிரப் பிரசாரம் மேற்கொண்டார். முன்னாள் அதிமுக அமைச்சர்களும் தொகுதியில் முகாமிட்டு பிரசாரத்தைக் கவனித்தனர்.

பாமக சார்பில் அதன் நிறுவனர் டாக்டர் ராமதாஸ், மகன் அன்புமணி ராமதாஸ், கட்சித் தலைவர் ஜி.கே.மணி உள்ளிட்டோர் பிரசாரம் செய்து வருகின்றனர். மணியின் மகன்தான் பாமக வேட்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

தேமுதிக சார்பில் கட்சித் தலைவர் விஜயகாந்த் தீவிரப் பிரசாரம் மேற்கொண்டார்.

இன்று திமுகவின் இறுதிக் கட்ட பிரசாரத்தை துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் மேற்கொண்டு வருகிறார். அதிமுகவுக்காக நடிகர் ராமராஜன் உள்ளிட்டோர் பிரசாரம் செய்கின்றனர்.

டாக்டர் ராமதாஸ் இன்று காலை பாப்பாரப்பட்டியில் பிரசாரத்தைத் தொடங்கினார். மாலையில் பென்னாகரத்தில் முடித்தார்.

இதேபோல விஜயகாந்த்தும் இன்று இறுதிக் கட்ட பிரசாரத்தை மேற்கொண்டார். மாலை 5 மணிக்கு இண்டூரில் பிரசாரத்தை முடித்தார்.

கருத்துக் கணிப்புகளுக்கு தடை...

இதற்கிடையே தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில்,

பென்னாகரம் தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் 27-ந் தேதி காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது. இந்த தேர்தல் தொடர்பாக கருத்துக் கணிப்புகள் வெளியிடுவதற்கு சில நிபந்தனைகள் விதிக்கப்படுகின்றன.

அதாவது 25ம் தேதி மாலை 5 மணிக்குப் பிறகு தொலைக்காட்சி, இண்டர்நெட், ரேடியோ, இண்டர்நெட் டிவி, கேபிள் டிவி, செல்போன் அல்லது பத்திரிகைகள், செய்தித்தாள், போஸ்டர், விளம்பர தட்டி, துண்டுப் பிரசுரங்கள் உள்பட எந்த வகையிலும் கருத்துக் கணிப்புகளை வெளியிடக்கூடாது.

மார்ச் 25ம் தேதிக்கு முன்பு, கருத்துக் கணிப்புகளை வெளியிடுவோர், அந்த கருத்துக் கணிப்பு எத்தனை பேரிடம் நடத்தப்பட்டது, கருத்துக் கணிப்பு மேற்கொள்ளப்பட்ட இடங்கள் பற்றிய விவரம், போன்றவற்றையும் தெரிவிக்க வேண்டும். அதில் தவறு ஏற்படுவதற்கு எத்தனை சதவீத வாய்ப்பு உள்ளது. ஆய்வு மேற்கொண்டவர்கள் யார் என்பது பற்றியும் தெரிவிக்க வேண்டும்.

இதுபோல், தேர்தல் நடைபெறும் நாளன்று ஓட்டு போட்டுவிட்டு வருவோரிடம் காலை 8 மணி முதல் மாலை 5.30 மணி வரை கருத்துக் கணிப்பு நடத்த தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. இதை யாராவது மீறினால் 2 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், அபராதமும் விதிக்கப்படும் என்று கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+