பென்னாகரம்: இன்று மாலை 5 மணியுடன் பிரசாரம் ஓய்கிறது- கருத்துக் கணிப்புகள் வெளியிட தடை

பென்னாகரம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் சனிக்கிழமை நடைபெறுகிறது. இதில், திமுகவின் இன்பசேகரன், பாமகவின் தமிழ்க்குமரன், அதிமுகவின் அன்பழகன், தேமுதிகவின் காவேரி வர்மன் உள்பட மொத்தம் 31 பேர் போட்டியிடுகிறார்கள்.
இடைத் தேர்தலுக்கான பிரசாரம் படு தீவிரமாக நடந்து வந்தது. திமுக சார்பில் முதல்வர் கருணாநிதி நேற்று பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் உள்ளிட்டோரும் கலந்து கொண்டு பிரசாரம் செய்துள்ளனர்.
அதிமுகவுக்காக அதன் பொதுச் செயலாளர் ஜெயலலிதா தீவிரப் பிரசாரம் மேற்கொண்டார். முன்னாள் அதிமுக அமைச்சர்களும் தொகுதியில் முகாமிட்டு பிரசாரத்தைக் கவனித்தனர்.
பாமக சார்பில் அதன் நிறுவனர் டாக்டர் ராமதாஸ், மகன் அன்புமணி ராமதாஸ், கட்சித் தலைவர் ஜி.கே.மணி உள்ளிட்டோர் பிரசாரம் செய்து வருகின்றனர். மணியின் மகன்தான் பாமக வேட்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
தேமுதிக சார்பில் கட்சித் தலைவர் விஜயகாந்த் தீவிரப் பிரசாரம் மேற்கொண்டார்.
இன்று திமுகவின் இறுதிக் கட்ட பிரசாரத்தை துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் மேற்கொண்டு வருகிறார். அதிமுகவுக்காக நடிகர் ராமராஜன் உள்ளிட்டோர் பிரசாரம் செய்கின்றனர்.
டாக்டர் ராமதாஸ் இன்று காலை பாப்பாரப்பட்டியில் பிரசாரத்தைத் தொடங்கினார். மாலையில் பென்னாகரத்தில் முடித்தார்.
இதேபோல விஜயகாந்த்தும் இன்று இறுதிக் கட்ட பிரசாரத்தை மேற்கொண்டார். மாலை 5 மணிக்கு இண்டூரில் பிரசாரத்தை முடித்தார்.
கருத்துக் கணிப்புகளுக்கு தடை...
இதற்கிடையே தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில்,
பென்னாகரம் தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் 27-ந் தேதி காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது. இந்த தேர்தல் தொடர்பாக கருத்துக் கணிப்புகள் வெளியிடுவதற்கு சில நிபந்தனைகள் விதிக்கப்படுகின்றன.
அதாவது 25ம் தேதி மாலை 5 மணிக்குப் பிறகு தொலைக்காட்சி, இண்டர்நெட், ரேடியோ, இண்டர்நெட் டிவி, கேபிள் டிவி, செல்போன் அல்லது பத்திரிகைகள், செய்தித்தாள், போஸ்டர், விளம்பர தட்டி, துண்டுப் பிரசுரங்கள் உள்பட எந்த வகையிலும் கருத்துக் கணிப்புகளை வெளியிடக்கூடாது.
மார்ச் 25ம் தேதிக்கு முன்பு, கருத்துக் கணிப்புகளை வெளியிடுவோர், அந்த கருத்துக் கணிப்பு எத்தனை பேரிடம் நடத்தப்பட்டது, கருத்துக் கணிப்பு மேற்கொள்ளப்பட்ட இடங்கள் பற்றிய விவரம், போன்றவற்றையும் தெரிவிக்க வேண்டும். அதில் தவறு ஏற்படுவதற்கு எத்தனை சதவீத வாய்ப்பு உள்ளது. ஆய்வு மேற்கொண்டவர்கள் யார் என்பது பற்றியும் தெரிவிக்க வேண்டும்.
இதுபோல், தேர்தல் நடைபெறும் நாளன்று ஓட்டு போட்டுவிட்டு வருவோரிடம் காலை 8 மணி முதல் மாலை 5.30 மணி வரை கருத்துக் கணிப்பு நடத்த தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. இதை யாராவது மீறினால் 2 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், அபராதமும் விதிக்கப்படும் என்று கூறியுள்ளார்.
-
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
தேமுதிகவை திமுக கூட்டணிக்கு அனுப்பியதே எஸ்.பி.வேலுமணிதான்! கோவை ஈஷாவில்.. கொளுத்தி போட்ட புகழேந்தி -
Election Exclusive: துணை முதல்வர் விஜய்.. அல்வா மாதிரி ஆஃபர்களை அள்ளி வீசும் அமித் ஷா! செம கடுப்பில் எடப்பாடி பழனிசாமி! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான் -
சிலிண்டர் காலி.. LPG இல்லை.. சென்னையில் இன்று மூடப்படும் முக்கிய ஹோட்டல்கள்.. நிலைமை கையை மீறுது -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
ஹார்முஸ் ஜலசந்தி.. உலகையே உலுக்கும் 'கடல் கண்ணிவெடிகள்'.. கழுத்தை நெரிக்கும் ஈரான்.. டிரம்ப் ஷாக்!












Click it and Unblock the Notifications