புலிகளின் நினைவு சின்னங்களை அழிக்கும் இலங்கை அரசு!
வவுனியா: தமிழீழம் என்று அழைக்கப்படும் தமிழர் வாழும் பகுதிகளில் விடுதலைப் புலிகள் ஆட்சியில் அமைக்கப்பட்ட அனைத்து நினைவுச் சின்னங்களையும் அகற்றுவதில் குறியாக உள்ளது இலங்கை அரசு.
மாவீரர்களின் நினைவாக அமைக்கப்பட்ட துயிலிடங்கள், மாவீரர் நினைவுத் தூண்கள், தமிழர் அடையாளமான கலாச்சார சின்னங்கள் என ஒன்றுவிடாமல் அழித்தொழிக்கும்படி சிங்களப்படைகளுக்கு இலங்கை அரசு உத்தரவிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
வன்னிப் போருக்குப் பின், வட இலங்கையை சுற்றிப்பார்க்கப் போய் வந்த சில தமிழர்கள், இப்போது அந்தப் பகுதி கிட்டத்தட்ட சிங்களர் பிரதேசங்களாக, சிங்கள பெயர்ப் பலகைகளுடன் காணப்படுவதாகவும், பல இடங்களில் விடுதலைப் புலிகளின் சின்னங்கள் ஒன்றும் பாதியுமாக சிதைக்கப்பட்டிருப்பதாகவும் கூறினர்.
விடுதலைப் புலிகளின் ஆட்சியின்போது 400 பெரும் நினைவுச் சின்னங்கள், மாவீரர் துயிலிடங்களும் நிறுவப்பட்டிருந்ததாம்.
புலிகளின் முதல் கமாண்டரான சார்லஸ் அன்டனி, திலீபன் மற்றும் கிட்டு போன்றவர்களின் உருவச் சிலைகள் வடக்கிற்கு இனி அவசியமில்லை என இலங்கை அரசு அறிவித்துவிட்டே இந்த அழிப்பு வேலையில் இறங்கியுள்ளதாம்.
வன்னிப் போரில் தாய்லாந்து விமானங்கள்?:
இதற்கிடையே, விடுதலைப் புலிகளுக்கு எதிராக நடந்த இறுதிக் கட்டப் போரில் இலங்கை ராணுவத்துக்கு தாய்லாந்து விமானப் படை உதவியிருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
இந்தியா, சீனா, பாகிஸ்தான், ரஷ்யா போன்ற நாடுகள் இலங்கைக்கு ராணுவ உதவி வழங்கியிருப்பதாக ஏற்கெனவே குற்றம்சாட்டப்பட்டு வருகிறது.
போரில் தமிழருக்கு எதிராக தாக்குதலுக்குப் பயன்பட்ட தாய்லாந்து விமானங்கள் அந்த நாட்டுக்கு மீண்டும் திரும்பிச் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.
-
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
பாஜக - தவெக கூட்டணி உருவாகிறதா? திமுகவை வீழ்த்த பம்பர் ஆஃபர் 60 சீட், மெகா பொறுப்பு? டெல்லி பலே மூவ் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
"இந்த" 2 பேருக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்.. டி20 உலக கோப்பை வெற்றிக்கு பின் கம்பீர் சொன்ன வார்த்தை -
கருணாஸ் பாஜகவுக்கு விட்ட சவால்.. "இந்து மதமே கிடையாது" அதிர்ச்சியில் உறைந்த இந்து முன்னணி! -
நாலாபக்கமும் நெருக்கடி.. பாஜக கூட்டணிக்கு வருகிறாரா விஜய்? நயினார் நாகேந்திரனே கொடுத்த பதில் -
பாஜக கூட்டணி வர்றீங்களா? இல்ல கடையை சாத்துறீங்களா? விஜய்க்கு டெல்லி டெட்லைன்.. சிபிஐ பிடியில் தவெக! -
விஜய்க்கு இரட்டை அதிர்ச்சி.. சினிமா, அரசியல் இரண்டிலும் ஒரே நாளில் விழுந்த பேரிடி












Click it and Unblock the Notifications