சட்டசபை கூடியது – 20 நிமிடத்தில் கூட்டம் முடிந்து ஒத்திவைப்பு
சென்னை: புதிய சட்டசபையில் பட்ஜெட் தாக்கலுக்குப் பின்னர் இன்று முதல் முறையாக கூடிய சட்டசபை 20 நிமிடத்தில் முடிவடைந்து ஏப்ரல் 5ம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டது.
புதிதாக கட்டப்பட்டுள்ள சட்டசபைக் கட்ட்டத்தில் கடந்த 19ம் தேதி நிதியமைச்சர் அன்பழகன் பட்ஜெட் தாக்கல் செய்தார். அதன் பின்னர் 26ம் தேதிக்கு சட்டசபை ஒத்திவைக்கப்பட்டது.
அதன்படி இன்று காலை சட்டசபை கூடியது. அவை கூடியதும் மறைந்த முன்னாள் உறுப்பினர்கள் 8 பேருக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. உறுப்பினர்கள் 2 நிமிடம் மெளன அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் 2009-10ம் ஆண்டுக்கான இறுதி துணை பட்ஜெட்டுக்கான ரூ. 1249 கோடி ஒதுக்கீட்டுக்கு ஒப்புதல் தரப்பட்டது.
அதன் பின்னர் பட்ஜெட் முன்பண மானியக் கோரிக்கைக்கும் ஒப்புதல் தரப்பட்டது.
இதைத் தொடர்ந்து ஏப்ரல் 5ம் தேதி வரை சட்டசபை ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் ஆவுடையப்பன் அறிவித்தார்.












Click it and Unblock the Notifications