இந்தியாவுடன் நாங்கள் நேரடியாக மோதவில்லை - நட்பாக இருக்க முடியும்: தலிபான்கள்
டெல்லி: இந்தியாவுடன் நாங்கள் நேரடி மோதலில் ஈடுபடவில்லை. இந்தியாவுக்கும், ஆப்கானிஸ்தானுக்கும் இடையே வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த உறவுகள், நெருக்கம் உள்ளது. எனவே இந்தியாவுடன் நாங்கள் நட்புடன் இருக்க முடியும், அந்த சூழலை ஏற்படுத்த முடியும் என்று தலிபான் அமைப்பு கூறியுள்ளது.
இதுகுறித்து தலிபான் செய்தித் தொடர்பாளர் சபியுல்லா முஜாஹித் அளித்துள்ள ஒரு பேட்டியில், ஆப்கானிஸ்தானை விட்டு இந்தியா வெளியேற வேண்டும் என்று நாங்கள் விரும்பவில்லை. அதேசமயம் காபூலில் நடந்த தாக்குதல்களை நாங்கள் தவறு என்றும் சொல்ல விரும்பவில்லை.
இந்தியாவுக்கும், தலிபான்களுக்கும் இடையே நட்பான சூழலை ஏற்படுத்த முடியும். நட்பாக இருக்க முடியும். இந்தியாவுடன் நாங்கள் நேரடியாக எந்த இடத்திலும் மோதியதில்லை.
அதேசமயம், ஹமீத் கர்சாயை இந்தியா ஆதரிப்பதை நாங்கள் வெறுக்கிறோம். மேற்கத்திய நாடுகளுக்கு ஆதரவாக இந்தியா செயல்படுவதை நாங்கள் எதிர்க்கிறோம்.
தலிபான்கள் ஆட்சியைப் பிடித்தால், இந்தியா உள்பட அனைத்து நாடுகளுடனும் நட்புறவை பேணுவோம். தலிபான்களும், இந்தியாவும் இணைந்து செயல்படுவது சாத்தியமானதே.
ஆப்கானிஸ்தானுக்கு மேற்கத்திய நாடுகள் படைகளை அனுப்பி எங்களைத் தாக்கி வருகின்றன. ஆனால் இந்தியா அப்படிச் செய்யவில்லை. ஆப்கானிஸ்தானை மறு சீரமைக்க மட்டுமே இந்தியா உதவி வருகிறது. எனவே இந்தியாவுக்கும், மேற்கத்திய நாடுகளுக்கும் வித்தியாசம் உள்ளது.
அதேசமயம், ஆப்கன் போரில் இந்தியா நடுநிலையுடன் இருக்கவில்லை. ராணுவ ரீதியாக இந்தியா ஆப்கானிஸ்தானில் செயல்படவில்லை என்றாலும் கூட ராணுவ பலத்தை வைத்து ஆப்கன் மக்களை ஒடுக்கி வரும் அமெரிக்கா தலைமையிலான படைக்கு ஆதரவாக உள்ளது. அவர்களின் ஆதரவை நாடி வரும் ஹமீத் கர்சாய் அரசை பலப்படுத்தி வருகிறது.
ஆக்கிரமிப்புப் படையினரால் அப்பாவிகள் பலர் கொல்லப்பட்டபோது அதை இந்தியா கண்டிக்கவில்லை.
பிப்ரவரி 26ம் தேதி காபூலில் நடந்த ஹோட்டல்கள் மீதான தாக்குதலுக்கு நாங்கள் தான் பொறுப்பு. தலிபான் வீரர்கள்தான் அதைச் செய்தனர். இந்திய உளவு அமைப்பான ராவின் ஏஜென்டுகள் அங்கு கூடியிருப்பதாக கிடைத்த தகவலின் பேரில்தான் அதைச் செய்தோம்.
இந்தியாவுக்கும், ஆப்கானிஸ்தானுக்கும் இடையிலான உறவு நீண்டு நெடியது. வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த உறவு. எனவே இந்தியாவுடன் நாங்கள் நேரடி மோதலில் ஈடுபடவில்லை. அதேசமயம், இந்தியாவின் நிலைப்பாடும் தவறானது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம் என்றார்ர சபியுல்லா.
-
வயிறு எரியுது..1 டீ 25 ரூபாயா? ரூ.40க்கு விற்கப்படும் இட்லி வடை! 6,000ஐ தாண்டிய வணிக கேஸ் சிலிண்டர்! -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன்












Click it and Unblock the Notifications