சென்னையில் பிரபல ரவுடி கழுத்து நெறித்து கொலை
சென்னை: சொத்துத் தகராறில் பிரபல ரவுடியை அவரின் சகோதரரே கூட்டாளிகளுடன் சேர்ந்து கொலை செய்தது தெரியவந்துள்ளது.
சைதாப்பேட்டையை சேர்ந்தவர் ஆஞ்சி கணேசன் (42); பிரபல ரவுடி. இவருக்கும் இவரது அண்ணன் வெங்கடேசனுக்கும் இடையே நீண்ட நாட்களாக சொத்து தகராறு இருந்து வந்தது.
சைதை அருகில் உள்ள பேன்பேட்டை பகுதியில் இவர்களுக்கு சொந்தமான 3 வீடுகள் உள்ளன. இதனை வாடகைக்கு விட்டுள்ளனர். வாடகை பணத்தை வசூலிப்பது தொடர்பாகவும் இருவருக்கும் தகராறு இருந்தது.
இதனால் ஆஞ்சி கணேசன் சைதாப்பேட்டையில் உள்ள தனது வீட்டை காலி செய்து விட்டு 3 மாதத்துக்கு முன்பு புறநகர் பகுதியான கோவிலம்பாக்கம் நன்மங்கலத்தில் குடியேறினார்.
இந்நிலையில் நேற்று மாலையில் ஆஞ்சி கணேசனின் செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில் அவரது நண்பர் சுந்தர் பேசினார்.
மேடவாக்கம் வரை வந்து பணத்தை வாங்கிச் செல்லுமாறு கூறினார். இதை நம்பி, ஆஞ்சி கணேசன் கோவிலம்பாக்கம் புறப்பட்டு சென்றார்.
பின்னர் இரவு நீண்ட நேரமாகியும் ஆஞ்சி கணேசன் வீடு திரும்பவில்லை. இதையடுத்து ஆஞ்சி கணேசனின் மனைவி மேடவாக்கம் போலீசில் புகார் செய்தார்.
அதில் எனது கணவரை சுந்தர் என்பவர் தான் கடத்திச் சென்றிருக்க வேண்டும். அவர்தான் கடைசியாக எனது கணவரிடம் பேசினார் என குறிப்பிட்டிருந்தார்.
இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், சைதாப்பேட்டை தாடண்ட நகரில் உள்ள குடியிருப்பு அருகே ஆஞ்சி கணேசன் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது.
போலீசார் சென்று பார்த்தபோது ஆஞ்சி கணேசனின் 2 கைகளும் வயரால் கட்டப்பட்டிருந்தது. அவரது கழுத்து நெறிக்கப்பட்டிருந்தது.
ஆஞ்சி கணேசன் அணிந்திருந்த லுங்கியை கிழித்தே அவரது கழுத்தை நெறித்து கொலையாளிகள் அவரை தீர்த்துக் கட்டியுள்ளனர்.
அவரது பின் தலை மற்றும் உடலில் லேசான காயங்கள் இருந்தன. பிணத்தை கைப்பற்றி ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.
ஆஞ்சி கணேசனை கொன்றது யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
அப்போது அவரது அண்ணன் வெங்கடேசனே, நண்பர்களுடன் சேர்ந்து திட்டமிட்டு இக்கொலையை செய்தது தெரிய வந்தது.
சொத்து தகராறு காரணமாக சொந்த தம்பியையே தீர்த்துக்கட்டிய வெங்கடேசன் தப்பி ஓடி தலைமறைவாகி விட்டார்.
அவரது நண்பர்கள் சுந்தர், சத்யா, முருகேசன் ஆகியோருக்கும் இக்கொலையில் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது.
இவர்கள் அனைவரையும் பிடிக்க போலீசார் வலை விரித்துள்ளனர்.
-
சென்னையிலுள்ள தங்கும் ஹோட்டல்கள் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டை எப்படி சமாளிக்கின்றன தெரியுமா? -
"ஸ்டாக் இல்லை" சென்னை கடைகளில் மளமளவென காலியாகும் இண்டக்ஷன் ஸ்டவ்-கள்! நேரடி கள ரிப்போர்ட்! -
13 வயது சிறுமியை 15 பேர் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கு.. விசாரணையை சென்னைக்கு மாற்ற தந்தை கோரிக்கை -
கேஸ் சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்படும்.. தமிழக அரசு அதிரடி எச்சரிக்கை.. என்னாச்சு? -
கேஸ் பிரச்சனை எப்போது சரியாகும்.. வெளியான குட்நியூஸ்.. மக்கள் அறிய வேண்டியவை -
சிங்கப்பூரில் 4000 டாலர் சம்பளம்.. லேடீஸ் ஹாஸ்டல் ஐஸ்வர்யா மாஸ்டர் பிளானில் சிக்கிய பரிதாப பெண்கள் -
சென்னையில் தங்க ரதம்.. கண்டக்டர் இல்லாத பஸ்கள் அறிமுகம் செய்த அரசு.. எந்த ரூட்டில் இயக்கம்? -
தமிழகத்தில் 5 ஆண்டுகளில் குற்ற சம்பவங்கள் குறைந்துள்ளன.. டேட்டாவுடன் உள்துறை செயலர் விளக்கம் -
சென்னையில் திருச்சி மாணவி பாலியல் வன்கொடுமை புகார் பொய்யானது! அபிராமபுரம் போலீஸ் விளக்கம் -
LPG Shortage: சமையல் கேஸ் சிலிண்டர் புக் செய்ய முடியவில்லையா! இந்த App-ல் டிரை செய்து பாருங்க! -
பயப்பட வேண்டாம்.. தமிழ்நாட்டில் பெட்ரோல் தட்டுப்பாடே இல்லை.. பங்க் உரிமையாளர்கள் விளக்கம்! -
வீட்டில் இருக்குற தண்ணி டேங்க் மட்டும் தான் கழட்டிட்டு வரல.. திரும்பி பார்க்க வைத்த சென்னைவாசி











Click it and Unblock the Notifications