பிளஸ்டூ விடைத்தாள் திருத்தும் பணிகள் இன்று முதல் தொடக்கம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழகம் முழுவதும் பிளஸ்டூ விடைத்தாள் திருத்தும் பணிகள் இன்று முதல் தொடங்கியுள்ளன.
சமீபத்தில் பிளஸ்டூ தேர்வுகள் முடிந்தன. இதையடுத்து இன்று முதல் விடைத்தாள் திருத்தும் பணிகள் தொடங்கியுள்ளன. சுமார் ஏழரை லட்சம் மாணவ, மாணவியர் தேர்வு எழுதியுள்ளனர்.
முதல் கட்டமாக மாற்று எண் இடப்படாத விடைத்தாள்கள் திருத்தும் பணி தொடங்கியுள்ளது. அடுத்து ஏப்ரல் 3ம் தேதி முதல் மாற்று எண் இடப்பட்ட விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கும்.
விடைத்தாள் திருத்தும் பணிகள் ஏப்ரல் 20ம் தேதிக்குள் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், கடந்த வருடத்தை விட இந்த ஆண்டு முன்கூட்டியே தேர்வு முடிவுகள் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications