ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் மீண்டும் தாக்குதல்
Subscribe to Oneindia Tamil
ராமேஸ்வரம்: மீன் பிடிக்கச் சென்ற ராமேஸ்வரம் மீனவர்கள் மீது கச்சத்தீவு அருகே இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தி விரட்டியுள்ளனர்.
நேற்று ராமேஸ்வரம் பகுதியிலிருந்து 670 விசைப் படகுகள் கடலில் மீன் பிடிக்கச் சென்றன. இவற்றில் 17 படகுகளில் இருந்த மீனவர்கள் கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது, அங்கு வந்த இலங்கைக் கடற்படையினர் மீனவர்களை சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தினர். அவர்களிடமிருந்த பொருட்களையும் பறித்துக் கொண்டு விரட்டி விட்டனர்.
இதையடுத்து அந்தப் படகுகளில் இருந்த மீனவர்கள் விரைவாக கரைக்குத் தப்பி வந்தனர்.












Click it and Unblock the Notifications