இலங்கை திரும்பிய ஈபிஆர்எல்எப் தலைவர் வரதராஜ பெருமாள்!

1990ம் ஆண்டு மறைந்த பிரதமர் ராஜிவ் காந்தியின் உதவியோடும், இந்திய அமைதி காக்கும் படையின் பாதுகாப்போடும் வட-கிழக்கு மாகாண முதல்வராக நியமிக்கப்பட்டவர் வரதராஜ பெருமாள்.
இலங்கையில் தனி ஈழம் வேண்டி ஆயுதம் ஏந்தி போராட்டம் நடத்திய பல குழுக்களின் தலைவர்களில் ஒருவரான இவர், ஈ.பி.ஆர்.எல்.எப். இயக்கத்தை நடத்தி வந்தார்.
ஆனால், விடுதலைப் புலிகளின் கை ஓங்கியதால் வரதராஜ பெருமாளும் அவரது ஆதரவாளர்களும் புலிகளுக்கு எதிராக செயல்பட்டு வந்தனர்.
1989ம் ஆண்டு இந்திய அமைதி காக்கும் படை என்ற இலங்கை சென்று புலிகளை ஒடுக்க முயன்றபோது அவர்களுடன் கைகோர்த்தார் வரதராஜ பெருமாள்.
இதையடுத்து அவரை வட-கிழக்கு மாகாண முதல்வராக்கினார் ராஜிவ் காந்தி. 1988ம் ஆண்டு டிசம்பர் முதல் 1990ம் ஆண்டு மார்ச் வரை இவர் 'பொம்மை' முதல்வராக இருந்தார்.
ஆனால், 1990ம் ஆண்டு மார்ச் மாதம் இந்தியப் படை நாடு திரும்பியபோது வரதராஜ பெருமாள் இந்தியாவில் தஞ்சமடைந்தார்.
ரா-ஐ.பி பாதுகாப்புடன் இந்தியாவில் ரகசிய இடத்தில் வைத்து பாதுகாக்கப்பட்டார். சில காலம் டெல்லியிலும் பின்னர் ராஜஸ்தான் மாநிலத்தில் ஓரிடத்திலும் பலத்த பாதுகாப்புடன் அவர் தங்க வைக்கப்பட்டிருந்தார்.
2000ம் ஆண்டு மீண்டும் இலங்கை சென்ற இவர் சந்திரிகா குமாரதுங்காவுக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
ஆனால், அந்தத் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கே வெற்றி பெற்றதால் மீண்டும் தன் உயிருக்கு பாதுகாப்பு இல்லை என்பதால் மீண்டும் இந்தியாவுக்கே வந்துவிட்டார்.
இப்போத விடுதலைப் புலிகளுடனான போர் முடிவுக்கு வந்துவிட்ட நிலையில், புலிகள் ஒடுக்கப்பட்ட நிலையில் வரதராஜ பெருமாள் தனது மனைவி மற்றும் உறவினர் ஒருவருடன் இலங்கை திரும்பியுள்ளார்.
நேற்று இந்த ரகசிய பயணத்தை அவர் மேற்கொண்டார். இலங்கையில் தமிழர் பகுதிகளில் மீண்டும் தீவிர அரசியலில் ஈடுபட வரதராஜ பெருமாள் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
பெருமாளின் கட்சி வரும் இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications