ஜெய்ன்-ஏர்டெல் டீல்: இன்று முறைப்படி அறிவிப்பு
மும்பை: ஜெய்ன் டெலிகாமின் ஆப்ரிக்கப் பிரிவை கையகப்படுத்தும் பேச்சுவார்த்தையை வெற்றிகரமாக முடித்துள்ள ஏர்டெல், இன்று அதுகுறித்த முறையான அறிவிப்பை வெளியிடுகிறது.
ஆம்ஸ்டர்டாமில் உள்ள ஜெய்ன் டெலிகாம் தலைமை அலுவலகத்தில் நடக்கும் கூட்டத்துக்குப் பிந்தைய பத்திரிகையாளர் சந்திப்பில் இந்த ஒப்பந்தம் அறிவிக்கப்படுகிறது.
இந்த ஒப்பந்தத்தின் மொத்த மதிப்பு 10.7 பில்லியன். இந்த வர்த்தகத்தின் மூலம் ஆப்ரிக்காவின் இரண்டாவது பெரிய தொலைத் தொடர்பு நிறுவனம் என்ற அந்தஸ்தைப் பெறுகிறது ஏர்டெல். ஆப்ரிக்காவின் 15 நாடுகளில் உள்ள 42 மில்லியன் வாடிக்கையாளர்கள் உடனடியாக ஏர்டெல்லின் தொலைத் தொடர்பு சேவையைப் பெறுகிறார்கள்.
இதுகுறித்து பார்தி ஏர்டெல்லின் முக்கிய அலுவலர் ஒருவர் கூறுகையில், ஜெய்ன் செல்காமுடன் அனைத்து மட்ட ஒப்பந்தங்களும், நடைமுறைகளும் முடிந்துவிட்டன. ஆனால் அதுகுறித்த விவரங்களை இப்போது கூறமுடியாது. முறைப்படி இன்றைய கூட்டத்தில்தான் அறிவிக்கப்பட வேண்டும், என்றார்.












Click it and Unblock the Notifications