தலித் பஞ்சாயத்து தலைவர்களுக்கு பல்கலைக்கழக துணைவேந்தர் அறிவுரை!
நெல்லை: தலித் பிரிவைச் சேர்ந்த பஞ்சாயத்து தலைவர்கள் தங்களின் அதிகாரம் குறித்து முழுமையாக தெரிந்துகொள்ள வேண்டும் என நெல்லை பல்கலைக்கழகத்தில் நடந்த பயிற்சி முகாமில் துணைவேந்தர் சபாபதி மோகன் பேசினார்.
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் சமூக விலக்கல் மற்றும் உட்கொணர்வு கொள்கை ஆய்வு மையம் சார்பில் தலித் பஞ்சாயத்து பிரதிநிதிகளுக்கான மேம்பாட்டு திறன் பயிற்சி நடந்தது.
இதி்ல் துணைவேந்தர் சபாபதி மோகன் பேசுகையில்,
'சமூகத்தில் இருந்து விலக்கப்பட்டவர்களை மீண்டும் சமூதாயத்திற்குள் கொண்டு வரும் வகையிலான நடவடிக்கைகளை மேற்கொள்ள நெல்லை பல்கலைக்கழகத்தின் சமூக விலக்கல் மற்றும் உட்கொணர்வு கொள்கை ஆய்வு மையத்திற்கு ரூ.2 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
பல்கலைக் கழக மானியக் குழு இந்த நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது. தலித் பஞ்சாயத்துத் தலைவர்கள் தங்களது அதிகாரம் குறித்து முழு்மையாக தெரிந்து கொள்ள வேண்டும்.
அரசு மற்றும் பல்வேறு அமைப்புகளிடம் இருந்து நிதியை பெறுவது எப்படி, நிதியை பயன்படுத்துவது எப்படி என்பது குறித்து நன்கு தெரிந்து வைத்து கொள்ள வேண்டும்.
அரசிடம் இருந்து பெரும் நிதியை மக்களுக்கு முழுமையாக சென்றடையும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
சமூகத்தில் பின் தங்கியவர்கள் மீது யாரும் நம்பிக்கை வைப்பதில்லை. இந்த கருத்தை மாற்றும் வகையில் தலித் பஞ்சாயத்து தலைவர்கள் சிறப்பாக செயல்பட வேண்டும்' என்றார்.












Click it and Unblock the Notifications