ஆசிரியை திட்டியதால் மனம் உடைந்த 5ம் வகுப்பு மாணவி தற்கொலை
Subscribe to Oneindia Tamil
செங்கல்பட்டு:வகுப்புக்குத் தாமதமாக வந்ததற்காக ஆசிரியை திட்டியதால், 5ம் வகுப்பு மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் நெரும்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மூர்த்தி. இவரது மகள் ஹர்சினி. 5ம் வகுப்பு படித்து வந்தாள். நேற்று ஹர்சினி வகுப்புக்குத் தாமதமாகப் போயுள்ளாள். இதையடுத்து ஆசிரியை அவளைத் திட்டியதாகத் தெரிகிறது.
இதனால் மனம் உடந்த ஹர்சினி, வீட்டுக்குத் திரும்பியதும் தனது தாயிடம் கூறி அழுதுள்ளாள். பின்னர் மண்ணெண்ணை ஊற்றி தீவைத்துக் கொண்டாள்.
இதையடுத்து அவளை செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாள். அங்கு சிகிச்சை பலனின்றி ஹர்சினி இன்று உயிரிழந்தாள்.
இதுகுறித்து திருக்கழுக்குன்றம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications