சுப்ரீம் கோர்ட் உத்தரவை உடனே அமல்படுத்த வேண்டும்: பிரதமருக்கு அச்சுதானந்தன் கடிதம்

உச்சநீதிமன்றத்தின் உத்தரவை தூக்கித் தூரப் போட்டு விட்டு தனிச் சட்டத்தை இயற்றிய கேரளா, இன்று அதே உச்சநீதிமன்றத்தின் உத்தரவு ஒன்றை வேகமாக அமல்படுத்துமாறு வலியுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
முல்லை பெரியாறு அணையின் உறுதித் தன்மை குறித்து ஆராய முன்னாள் நீதிபதி ஏ.எஸ்.ஆனந்த் தலைமையைலி குழு அமைக்குமாறு மத்திய அரசுக்கு கடந்த பிப்ரவரி மாதம் 18ம் தேதி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த குழு அவசியமற்றது என்றும், குழுவில் தமிழகம் சார்பில் யாரும் இடம் பெற வேண்டியதும் தேவையற்ற என்ற நிலைபாட்டை தமிழக அரசு எடுத்துள்ளது.
ஆனால், கேரளா சார்பில் இக்குழுவில் இடம்பெறும் உறுப்பினராக நீதிபதி கே.டி.தாமஸை கேரள அரசு ஏற்கனவே நியமித்துவிட்டது.
மத்திய அரசு தரப்பில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் இதுவரை எடுக்கப்படவில்லை. எனவே உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு ஒரு மாதமாகியும் மத்திய அரசு சார்பில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளாதது நீதிமன்ற அவமதிப்பாக கருதப்படும் எனக் குறிப்பிட்டு கேரள முதல்வர் வி.எஸ்.அச்சுதானந்தன் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கடிதம் எழுதியுள்ளார்.
முல்லைப் பெரியாறு அணையின் உயரத்தை அதிகரிக்கலாம் என்று உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை தூக்கித் தூரப் போட்டது இதே கேரள அரசுதான். அந்த உத்தரவை செல்லாத்தாக்கும் வகையில் சட்டத்தைக் கொண்டு வந்த்து. அதை எதிர்த்துதான் தற்போதைய வழக்கே தொடரப்பட்டள்ளது தமிழக அரசால்.
அன்று உச்சநீதிமன்ற உத்தரவை மதிக்காமல், அவமதித்த கேரள அரசு, இன்று உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவை அமல்படுத்தாவிட்டால் அது நீதிமன்ற அவமதிப்பாகி விடும் என்று பரபரப்பது பெரும் கேலிக்கூத்தாக உள்ளது.












Click it and Unblock the Notifications