For Daily Alerts
Just In
நளினி விடுதலையில் அரசியல் சிக்கலும், சட்டச் சிக்கலும்- சென்னையில் விவாதம்
சென்னை: நளினி விடுதலை விவகாரம் குறித்து சென்னையில் விவாத நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நளினி விடுதலை- அரசியல் சிக்கலும், சட்டச் சிக்கலும் என்ற தலைப்பில் இந்த நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
ஏப்ரல் 4ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு, தி.நகர் தெய்வநாயகம் பள்ளியில் இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது. பிரபாகரன் வரவேற்புரையாற்றுகிறார். எழுத்தாளர் பூங்குழலி, பத்திரிக்கையாளர் அருள் எழிலன், ஆவணப் பட இயக்குநர் பாரதி கிருஷ்ணகுமார், பாடலாசிரியர் தாமரை, பெரியார் திராவிடர் கழக பொதுச் செயலாளர் விடுதலை ராஜேந்திரன் , வழக்கறிஞர்கள் சுந்தர்ராஜன், பாண்டிமாதேவி ஆகியோர் கருத்துரைக்கிறார்கள்.
ப்ரியா நன்றியுரை நவில்கிறார்.
மேலும் தொடர்புக்கு 98840 68321 என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.
நளினி ராஜீவ் காந்தி கொலை வழக்கு விடுதலை விவாதம் சென்னை nalini rajiv gandhi murder case release debate chennai
Story first published: Saturday, April 3, 2010, 9:33 [IST]