நளினி விடுதலையில் அரசியல் சிக்கலும், சட்டச் சிக்கலும்- சென்னையில் விவாதம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: நளினி விடுதலை விவகாரம் குறித்து சென்னையில் விவாத நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நளினி விடுதலை- அரசியல் சிக்கலும், சட்டச் சிக்கலும் என்ற தலைப்பில் இந்த நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
ஏப்ரல் 4ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு, தி.நகர் தெய்வநாயகம் பள்ளியில் இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது. பிரபாகரன் வரவேற்புரையாற்றுகிறார். எழுத்தாளர் பூங்குழலி, பத்திரிக்கையாளர் அருள் எழிலன், ஆவணப் பட இயக்குநர் பாரதி கிருஷ்ணகுமார், பாடலாசிரியர் தாமரை, பெரியார் திராவிடர் கழக பொதுச் செயலாளர் விடுதலை ராஜேந்திரன் , வழக்கறிஞர்கள் சுந்தர்ராஜன், பாண்டிமாதேவி ஆகியோர் கருத்துரைக்கிறார்கள்.
ப்ரியா நன்றியுரை நவில்கிறார்.
மேலும் தொடர்புக்கு 98840 68321 என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.












Click it and Unblock the Notifications