நித்யானந்தா - ரஞ்சிதா வீடியோ: மாஜி சீடர் லெனின் கர்நாடக போலீசிடம் வாக்குமூலம்!
சென்னை: நித்யானந்தாவின் அந்தரங்கத்தை வெளியுலகுக்கு கொண்டு வரும் எண்ணத்தில் தான் அவரின் படுக்கை அறை காட்சிகளை வீடியோ எடுத்தேன் என்று நித்யானந்தாவின் மாஜி சீடர் லெனின் போலீசாரிடம் கூறியுள்ளார்.
நடிகை ரஞ்சிதாவுடன் செக்ஸ் லீலையில் ஈடுபட்டு வீடியோவில் பதிவாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார் நித்தியானந்தா. சேலத்தைச் சேர்ந்தவரும், நித்யானந்தாவின் மாஜி சீடருமான லெனின் போலீசாரிடம் கடந்த மாதம் 6ம் தேதி ஆதாரங்களுடன் புகார் அளித்தார்.
இதன்பேரில் நித்யானந்தா மீது 295 (ஏ) (மத உணர்வை துன்படுத்துதல்), 420 (மோசடி), 376 (கற்பழிப்பு), 377 (இயற்கைக்கு மாறாக உறவு கொள்ளுதல்), 506 (1) (மிரட்டல்), 120 (பி) சதித்திட்டம் தீட்டுதல்) ஆகிய 6 பிரிவுகள் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
மாநில அதிகார எல்லை காரணமாக நித்யானந்தா மீதான வழக்குகள் கர்நாடக போலீசாரால் விசாரிக்கப்பட்டு வருகிறது. கொலை மிரட்டல் உள்பட 2 வழக்குகள் மட்டும் சென்னை போலீசில் பதிவு செய்யப்பட்டு உள்ளது.
நித்யானந்தா இன்னமும் தலைமறைவாகவே உள்ள நிலையில், புகார் அளித்த லெனினிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையின் போது கர்நாடக போலீசார் பல்வேறு கேள்விகளை லெனினிடம் கேட்டுள்ளனர். அனைத்துக்கு அசராமல் பதில் தந்துள்ளார் லெனின்.
போலீஸ் விசாரணையில் லெனின் கூறியிருப்பதாவது: பெங்களூரில் நித்யானந்தா சாமியாரின் ஆஸரமத்தில் வேலை செய்த போது அவரின் அந்தரங்கங்களை தெரிந்து கொண்டேன்.
அவரின் அந்தரங்க முகத்தை அரங்கத்துக்கு கொண்டுவர நினைத்தேன். அந்த வீடியோ கேமராவை நான் சாமியாரின் படுக்கை அறையில் வைக்கவில்லை.
அங்குள்ள சிலர் எனக்கு உதவி செய்தார்கள். அவர்கள் தான் கேமராவை வைக்க உதவினர். அவர்களை நான் காட்டிக் கொடுக்க மாட்டேன். வீடியோவில் சில காட்சிகள் மட்டும் எடுக்கப்பட்டுள்ளன.
நித்யானந்தாவை ஆயிரக்கணக்கானவர்கள் கடவுளாக பாவித்து வழிபடுகிறார்கள். அவர்களை ஏமாற்றக் கூடாது என்பதற்காக வீடியோவை வெளியிட்டு நித்யானந்தாவின் உண்மையான சொரூபத்தை காட்டினேன்.
நான் ரஞ்சிதாவை காட்டிக் கொடுக்க வேண்டும் என்று நினைக்கவில்லை. சாமியாரின் நடவடிக்கைகள் பற்றி வீடியோ எடுக்கும் போது அவர் சிக்கிக் கொண்டார். இதற்காக வருந்துகிறேன்.
எனது எண்ணம் சாமியாரைப் பற்றி வெளி உலகுக்கு தெரிவிக்க வேண்டும் என்பது தான். ஆஸ்ரமத்தில் ஆரம்ப காலத்தில் சில பெண்கள் என்னிடம் நித்யானந்தா பற்றிய புகார்களை தெரிவித்தனர்.
பின்னர் விசாரித்து ஆதாரப்பூர்வமாக அதை வெளியிட நினைத்து தான் வீடியோ எடுத்தேன்.
மூன்று மாதத்துக்கு முன்புதான் அந்த வீடியோ எடுக்கப்பட்டது. சமீபத்தில் என்னுடன் நித்யானந்தா டெலிபோனில் பேசி மிரட்டிய ஆடியோ கேசட்டையும் போலீசாரிடம் ஒப்படைத்து இருக்கிறேன்.
நித்யானந்தா என்னை சமரசத்துக்கு வருமாறு அழைத்தார். நான் மறுத்ததால் என்னை மிரட்டினார் என்று லெனின் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications