ஒரிசாவில் மாவோயிஸ்ட் வன்முறை: பாதுகாப்பு படையினர் 11 பேர் பலி

உள்நாட்டு பாதுகாப்புக்கும் பெரும் அச்சுறுத்தலாக இருந்து வரும் மாவோயிஸ்ட் தீவிரவாதிகளை ஒடுக்கியே தீருவது என்ற முனைப்புடன் மத்திய உள்துறை அமைச்சகம் செயல்பட்டு வருகிறது.
மேற்குவங்கத்தில் நக்சல் பாதித்த லால்கர் பகுதியில் மாவோயிஸ்டுகளுக்கு எதிரான நடவடிக்கைகளை உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் இன்று நேரில் சென்று பார்வையிட்டார்.
மாவோயிஸ்டுகளை ஒடுக்குவது தொடர்பாக பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் நிர்வாக உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
அப்போது பேசிய சிதம்பரம், ஒரிசா மற்றும் ஜார்க்கண்ட்டில் மாவோயிஸ்ட் அட்டகாசம் அதிகளவில் இருப்பதாகக் குறிப்பிட்டுவிட்டு, 'மாவோயிஸ்டுகள் கோழைகள்' எனக் கூறினார்.
இவ்வாறு சிதம்பரம் பேட்டியளித்த சிறிது நேரத்தில் ஒரிசாவில் சாலையில் புதைத்து வைக்கப்பட்ட கண்ணிவெடி வெடித்து வாகனத்தில் சென்று கொண்டிருந்த பாதுகாப்புப் படையினர் 11 கொல்லப்பட்டனர்.
ஒரிசாவில் பாதிக்கும் மேற்பட்ட மாவட்டங்கள் மாவோயிஸ்ட் ஆதிக்கத்தில் உள்ளன. கொராபுட் மற்றும் மால்கங்கிரி மாவட்டத்தில் பைபரிகுடா நகரத்தை ஒட்டிய பகுதியில் நக்சல் ஆதிக்கம் வெகுவாக உள்ளதாக கருதப்படுகிறது.
மால்கங்கிரி மாவட்டத்தில் கோவிந்தப்பள்ளி என்ற இடத்தில் இந்த கண்ணிவெடி வெடித்துள்ளது. அவ்வழியே வாகனம் சென்றபோது இதில் சிக்கி வெடித்து சிதறியது.
அருகில் உள்ள பகுதியில் மாவோயிஸ்டுகள் மரங்களை வெட்டிப்போட்டு போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தி இருப்பதாக வந்த தகவலை அடுத்து, இந்த வீரர்கள் அப்பகுதிக்கு வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது வழியில் கண்ணிவெடியில் சிக்கிவிட்டதாக தெரிகிறது.












Click it and Unblock the Notifications