காஷ்மீர் எல்லையில் ஊடுருவ முயன்ற 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை
Subscribe to Oneindia Tamil
ஜம்மு: காஷ்மீர் எல்லை வழியாக இந்தியாவுக்கு ஊடுருவ முயன்ற இரண்டு தீவிரவாதிகள் ராணுவத்தினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இதுபற்றி இந்திய ராணுவ செய்தித் தொடர்பாளர் வெளியிட்டுள்ள செய்தி:
காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் இன்று காலை இரண்டு தீவிரவாதிகள் ஊடுருவ முயன்றனர்.
அவர்களை சுற்றிவளைத்து தடுத்து நிறுத்த இந்திய பாதுகாப்புப் படையினர் முற்பட்ட போது, ஊடுருவல்காரர்கள் துப்பாக்கியால் சுட்டு தப்பிக்க முயன்றனர்.
எனவே பதிலுக்கு பாதுகாப்புப் படையினர் திருப்பிச் சுட்டனர். இந்த துப்பாக்கி சண்டையில் ஊடுருவல்காரர்கள் இரண்டு பேரும் பலியானார்கள்.
பலியான இருவரும் தீவிரவாத அமைப்பைச் சேர்நதவர்கள் எனத் தெரிகிறது. அப்பகுதியில் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.












Click it and Unblock the Notifications