நீர் மோர், தண்ணீர் பந்தல் திறக்க தொண்டர்களுக்கு ஜெயலலிதா உத்தரவு
சென்னை: கோடை வெயில் கொளுத்துவதால் மக்களின் தாகத்தை தீர்க்க தண்ணீர் மற்றும் நீர்மோர் பந்தல்களை திறக்குமாறு தனது தொண்டர்களுக்கு அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக அதிமுக ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கையில், 'ஆளும் கட்சியாக இருந்தாலும் சரி, எதிர்க்கட்சியாக இருந்தாலும் சரி மக்களின் தேவைகளை தீர்த்து வைப்பதில் முதலிடம் வகிக்கும் ஒரே இயக்கம் அதிமுக தான்.
வழக்கமாக ஒவ்வொரு கோடை பருவத்திலும், அதிமுக உடன் பிறப்புகள் குடிநீர் பந்தல்கள், நீர்மோர் பந்தல்கள் அமைத்து மக்களின் தாகத்தைத் தணிப்பது வழக்கம்.
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக வெயிலின் கொடுமை மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது.
ஆகவே, சமுதாய பொறுப்புணர்வும், மனிதாபிமானமும் மிக்க என் உயிரினும் மேலான எனதருமைக் கழக உடன்பிறப்புகள், தங்கள் பகுதியில் பொதுமக்களின் தாகத்தைத் தீர்க்கும் வகையில் குடிநீர், நீர் மோர் பந்தல்கள் அமைத்து மக்களின் தாகத்தைத் தீர்க்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications