தூத்துக்குடி துறைமுகத்தில் ரூ.5,300 கோடியில் விரிவாக்கப் பணிகள்
தூத்துக்குடி: தூத்துக்குடி துறைமுக விரிவாக்கப் பணிகள் ரூ. 5,300 கோடியில் மேற்கொள்ளப்பட உள்ளதாக துறைமுக பொறுப்பு கழக தலைவர் கு.ஜெ.ராவ் தெரிவித்தார்.
கடந்த 2009 - 2010 நிதியாண்டில் தூத்துக்குடி துறைமுகத்தின் செயல்பாடுகள் மற்றும் வளர்ச்சி திறன் குறித்து வருடாந்திர செய்தியாளர்கள் சந்திப்பு துறைமுக மாநாட்டு அரங்கில் நடைப்பெற்றது.
அப்போது துறைமுக பொறுப்பு கழக தலைவர் கு.ஜெ ராவ் கூறியதாவது:
சரக்கு கையாளும் திறனை அதிகரிக்கும் வகையில் தூத்துக்குடி துறைமுகத்தின் ஆழத்தை 10.7 மீட்டரில் இருந்து 12.8 மீ்ட்டராக அதிகரிக்கும் வகையில் சுமார் 538 கோடி ரூபாய் மதிப்பிட்டில் திட்ட பணிகள் செயல்படுத்தப்பட உள்ளன.
தூத்துக்குடியை சுற்றி பல அனல்மின் நிலையங்கள் நிறுவப்பட உள்ள நிலையில் இந்த அனல் மின் நிலையங்களுக்கு தேவைப்படும் 70 டன் நிலக்கரியை கையாள தேவையான அனைத்து கட்டமைப்பு வசதிகளை தூத்துக்குடி துறைமுகம் மேற்கொண்டு வருகிறது.
தூத்துக்குடி துறைமுகத்தில் உள்துறைமுக விரிவாக்க திட்டத்தின் கீழ் 800 கோடி ரூபாய் மதிப்பிட்டில் மூன்றாம் மற்றும் நான்காம் வடக்கு சரக்கு தளங்கள் அமைக்கவும், கட்டிட மூலப்பொருட்கள் ஏற்றுமதிக்காக குறைந்த ஆழம் கொண்ட சரக்கு தளம் அமைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.












Click it and Unblock the Notifications