For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பாகிஸ்தான் அவாமி தேசிய கட்சி கூட்டத்தில் குண்டுவெடிப்பு - 25 பேர் பலி

By Staff
Google Oneindia Tamil News

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் அவாமி தேசிய கட்சி கூட்டத்தில் குண்டு வெடித்ததில் 20 பேர் கொல்லப்பட்டனர். 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

பாகிஸ்தான், திர் மாவட்டத்தில் திமெர்காரா நகரில் மார்க்கெட் பகுதியில் அவாமி தேசிய கட்சி சார்பில் இன்று கூட்டம் நடத்தப்பட்டது.

அப்போது கூட்ட அரங்கத்தில் திடீரென சக்திவாய்ந்த குண்டு வெடித்தது. இந்த குண்டுவெடிப்பில் சம்பவ இடத்தேலேய 20க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

படுகாயங்களோடு உயிர் பிழைத்த 30க்கும் மேற்பட்டோரை மருத்துவனையில் சேர்த்ததாக போலீஸ் தரப்பில் தெரிவித்தனர்.

ஆனால் மருத்துவமனை வட்டாரத் தகவலின் படி, 25 பேர் பலியானதாகவும், 100க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்றுவருவதாக தெரிகிறது.

குண்டுவெடிப்புக்கான காரணம் குறித்து உடனடி தகவல்கள் இல்லை. இது மனித வெடிகுண்டு தாக்குதலாக இருக்கக் கூடும் என போலீசார் தெரிவித்தனர்.

திமெர்காரா நகரம் அமைந்துள்ள பகுதி மற்றும் அதை ஒட்டிய பூனர் மற்றும் ஸ்வாட் ஆகிய இடங்கள் முன்பு பாகிஸ்தானி தாலிபான்களின் ஆதிக்கத்தில் இருந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X