சானியா திருமணத்துக்கு எதிர்ப்பு: இ.ம.க.வினர் 27 பேர் கைது
சென்னை: பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரான சோயப் மாலிக்கை இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா திருமணம் செய்வதை எதிர்த்து பேராட்டம் நடத்திய இந்து மக்கள் கட்சியினர் 27 பேர் சென்னையில் கைது செய்யப்பட்டனர்.
பல்வேறு சர்ச்சைகளுக்கும், அதிரடி திருப்பங்களுக்கும் இடையே இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவுக்கும், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சோயப் மாலிக்குக்கும் வருகிற 15ம் தேதி திருமணம் நடக்க உள்ளது.
பாகிஸ்தானை சேர்ந்த சோயுப் மாலிக்கை சானியா மிர்சா திருமணம் செய்யக்கூடாது என்று இந்து மக்கள் கட்சியினர் நேற்று சென்னை கடற்கரை சாலையில் கண்ணகி சிலை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இ.ம.கட்சியின் தமிழக செயலாளர் பி.ஆர்.குமார் இதற்கு தலைமை தாங்கினார். உடனடியாக அண்ணாசதுக்கம் போலீசார் விரைந்து சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 27 பேரை கைது செய்தனர். பின்னர் மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.
முன்னதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் கூறுகையில், 'சானியா மிர்சாவுக்கு இந்தியா பல விருதுகளையும், பரிசுகளையும் கொடுத்துள்ளது.
அந்த விருதுகள், பரிசுகள் அனைத்தையும் அவர் இந்தியாவிடம் திருப்பி கொடுத்துவிட வேண்டும். இனிமேல் சானியா மிர்சாவையும், அவரது குடும்பத்தையும் இந்தியாவிற்காக விளையாட அனுமதிக்கக்கூடாது.
அவரையும் அவரது குடும்பத்தையும் நாடு கடத்தவேண்டும்' என்றனர்.












Click it and Unblock the Notifications