மும்பை தாக்குதலில் தாவூத்தின் பங்கு - அமெரிக்க ராணுவ கல்லூரி அறிக்கை
வாஷிங்டன்: கடந்த 2008ம் ஆண்டு நடந்த மும்பை பயங்கரவாத்த் தாக்குதலுக்கு தாவூத் இம்பராஹிமின் ஆதரவும் இருந்ததாக அமெரிக்க ராணுவக் கல்லூரி ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
கடந்த 2008 செம்படம்பர் 26ம் தேதி, கடல் வழியாக மும்பைக்குள் தீவிரவாதிகள் புகுந்து கண்ணில் பட்டவர்களையெல்லாம் சுட்டுக்கொன்று பெரும் கபளீகரம் ஏற்படுத்தினர்.
இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானில் உள்ள லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பே காரணம். தாக்குதல் நடத்தி சிக்கிய தீவிரவாதி கசாப் மீதான விசாரணை சமீபத்தில்தான் முடிவடைந்தது.
தாக்குதல் சதி திட்டம் பாகிஸ்தானில் இருந்து தான் தீட்டப்பட்டது என்பதற்கான ஆதாரங்களை இந்தியா பாகிஸ்தானுக்கு வழங்கியுள்ளது.
இந்த தாக்குதலுக்கு, இந்தியாவால் தேடப்பட்டு வரும் நிழலுலக தாதா தாவூத் இப்ராஹிமும் உடந்தையாக இருந்துள்ளதாக ஏற்கனவே செய்திகள் கசிந்தன.
இந்நிலையில், வாஷிங்டனில் உள்ள அமெரிக்க ராணுவ போர் கல்லூரியின் பாதுகாப்பு மற்றும் போர் வியூக பயிற்சிப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் இத்தகவல் இடம் பெற்றுள்ளது.
லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பைப் பற்றிய அந்த அறிக்கையில் தாவூத் பற்றி பல்வேறு தகவல்கள் கூறப்பட்டுள்ளன.
மும்பை தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு பின்னர் கடந்த 1993ம் ஆண்டில் இருந்து பாகிஸ்தான் பகுதியில் தாவூத் தங்கியிருப்பதாக தெரிகிறது.
பாகிஸ்தானில் ஏராளமான ஷாப்பிங் மால்கள், சொகுசு பங்களாக்கள், கப்பல் மற்றும் இதர போக்குவரத்து நெட்வொர்க் தொழில்களில் தாவூத் ஈடுபட்டுள்ளாதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்தியாவுக்கு ஆயுதங்கள் மற்றும் ஹெராயின் உள்ளிட்ட சட்டவிரோத பொருட்கள் சப்ளை செய்வதில் தாவூத்திற்கு முக்கிய பங்குள்ளதாகவும் அந்த அறிக்கை கூறுகிறது.
அதோடு, 2008ம் ஆண்டில் மும்பையில் நடந்த தீவிரவாத தாக்குதல் சம்பவத்தில் தாவூத்தின் பங்கு மிக முக்கியமானது.
இந்த தாக்குதல் திட்டத்தை தீவிரவாதிகள் தாங்கள் திட்டமிட்டபடி நிறைவேற்றியதற்கு, தாவூத் அளித்த 'லாஜிஸ்டிக் சப்போர்ட்' தான் மிக முக்கிய காரணமாக இருந்துள்ளது.
தாவூத் அளித்த ஆதரவின் மூலமாகவே தீவிரவாதிகளும், ஆயுதங்களும் நாசூக்காக மும்பைக்குள் நுழைய முடிந்தது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications