நளினிக்குப் பொது மன்னிப்பு கொடுக்க முடியாது – சென்னை உயர்நீதிமன்றம்

கடந்த 19 ஆண்டுகளாக சிறையில் வாடி வருகிறார் நளினி. தன்னை விடுதலை செய்யுமாறு கோரி அவர் சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகினார். இதை விசாரித்த உயர்நீதிமன்றம், நளினியின் கோரிக்கையைப் பரிசீலிக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.
தமிழக அரசும், புதிய சிறை ஆலோசனைக் குழுவை அமைத்து நளினியின் கோரிக்கையைப் பரிசீலிக்க உத்தரவிட்டது. அக்குழுவும் நளினியிடம் விசாரணை நடத்தியது. பின்னர் தனது அறிக்கையை தமிழக அரசிடம் ஒப்படைத்தது.
இந்த அறிக்கை சமீபத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. அந்த அறிக்கையில், நளினியை விடுதலை செய்வது இல்லை என்ற முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக கூறப்பட்டிருந்தது.
இதுகுறித்து கடந்த வாரம் நீதிபதிகள் எலிபே தர்மாராவ், சசிதரன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு விவாதம் நடந்த்து.
அப்போது வாதாடிய நளினியின் வக்கீல், கடந்த சில ஆண்டுகளில், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 1000 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். எனவே நளினியையும் விடுவிக்க வேண்டும் என்று வாதாடினார்.
அதற்கு அரசுத் தரப்பில் பதிலளிக்கையில், நளினியின் வழக்கை சிபிஐ விசாரித்துள்ளது. எனவே பொது மன்னிப்பு பெறும் தகுதி அவருக்குக் கிடையாது என்று வாதிடப்பட்டது.
இதையடுத்து தீர்ப்பு இன்றைக்கு ஒத்திவைக்கப்பட்டது. இன்று நீதிபதிகள் அளித்த தீர்ப்பின்போது நளினியின் மனுவைத் தள்ளுபடி செய்வதாக உத்தரவிட்டனர்.
பின்னர் நீதிபதிகள் கூறுகையில், ஏற்கனவே மரண தண்டனை விதிக்கப்பட்டவர் நளினி. பின்னர் இது கருணை ரீதியில் பரிசீலிக்கப்பட்டு ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.
எனவே சராசரி ஆயுள் தண்டனைக் கைதிகளைப் போல முன்கூட்டியே விடுதலை செய்வது உள்ளிட்ட எந்த சலுகைகையும் எதிர்பார்க்க முடியாது.
சிபிஐ வழக்குகளில் மாநில அரசால் தனித்த எந்த முடிவையும் எதிர்பார்க்க முடியாது, பொது மன்னிப்பு கோரவும் முடியாது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளதை இந்த கோர்ட் ஏற்கிறது. அதேபோல சிறை ஆலோசனைக் குழுவின் பரிந்துரை மற்றும் அது தெரிவித்துள்ள காரணங்களையும் கோர்ட் ஏற்கிறது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை முன்கூட்டியே திட்டமிட்டு சதி செய்து கொலை செய்த செயலில் சம்பந்தப்பட்டுள்ள நளினி முன்கூட்டியே விடுதலை செய்யுமாறு கோர முடியாது என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்யவுள்ளதாக நளினியின் வக்கீல் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications