நளினிக்குப் பொது மன்னிப்பு கொடுக்க முடியாது – சென்னை உயர்நீதிமன்றம்

கடந்த 19 ஆண்டுகளாக சிறையில் வாடி வருகிறார் நளினி. தன்னை விடுதலை செய்யுமாறு கோரி அவர் சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகினார். இதை விசாரித்த உயர்நீதிமன்றம், நளினியின் கோரிக்கையைப் பரிசீலிக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.
தமிழக அரசும், புதிய சிறை ஆலோசனைக் குழுவை அமைத்து நளினியின் கோரிக்கையைப் பரிசீலிக்க உத்தரவிட்டது. அக்குழுவும் நளினியிடம் விசாரணை நடத்தியது. பின்னர் தனது அறிக்கையை தமிழக அரசிடம் ஒப்படைத்தது.
இந்த அறிக்கை சமீபத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. அந்த அறிக்கையில், நளினியை விடுதலை செய்வது இல்லை என்ற முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக கூறப்பட்டிருந்தது.
இதுகுறித்து கடந்த வாரம் நீதிபதிகள் எலிபே தர்மாராவ், சசிதரன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு விவாதம் நடந்த்து.
அப்போது வாதாடிய நளினியின் வக்கீல், கடந்த சில ஆண்டுகளில், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 1000 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். எனவே நளினியையும் விடுவிக்க வேண்டும் என்று வாதாடினார்.
அதற்கு அரசுத் தரப்பில் பதிலளிக்கையில், நளினியின் வழக்கை சிபிஐ விசாரித்துள்ளது. எனவே பொது மன்னிப்பு பெறும் தகுதி அவருக்குக் கிடையாது என்று வாதிடப்பட்டது.
இதையடுத்து தீர்ப்பு இன்றைக்கு ஒத்திவைக்கப்பட்டது. இன்று நீதிபதிகள் அளித்த தீர்ப்பின்போது நளினியின் மனுவைத் தள்ளுபடி செய்வதாக உத்தரவிட்டனர்.
பின்னர் நீதிபதிகள் கூறுகையில், ஏற்கனவே மரண தண்டனை விதிக்கப்பட்டவர் நளினி. பின்னர் இது கருணை ரீதியில் பரிசீலிக்கப்பட்டு ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.
எனவே சராசரி ஆயுள் தண்டனைக் கைதிகளைப் போல முன்கூட்டியே விடுதலை செய்வது உள்ளிட்ட எந்த சலுகைகையும் எதிர்பார்க்க முடியாது.
சிபிஐ வழக்குகளில் மாநில அரசால் தனித்த எந்த முடிவையும் எதிர்பார்க்க முடியாது, பொது மன்னிப்பு கோரவும் முடியாது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளதை இந்த கோர்ட் ஏற்கிறது. அதேபோல சிறை ஆலோசனைக் குழுவின் பரிந்துரை மற்றும் அது தெரிவித்துள்ள காரணங்களையும் கோர்ட் ஏற்கிறது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை முன்கூட்டியே திட்டமிட்டு சதி செய்து கொலை செய்த செயலில் சம்பந்தப்பட்டுள்ள நளினி முன்கூட்டியே விடுதலை செய்யுமாறு கோர முடியாது என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்யவுள்ளதாக நளினியின் வக்கீல் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்!












Click it and Unblock the Notifications