தேவைப்பட்டால் சோயப் மாலிக்கைக் கைது செய்வோம் – ஹைதராபாத் கமிஷனர்

நேற்று சானியா மிர்ஸாவின் வீட்டுக்குச் சென்ற போலீஸ் குழுவினர் அங்கு வைத்து சோயப்பிடம் 2 மணி நேரம் விசாரணை நடத்தினர். பின்னர் ஆயிஷாவிடமும் விசாரணை நடத்தப்பட்டது.
இந்த விசாரணைக்குப் பின்னர் சோயப் மாலிக்கின் பாஸ்போர்ட் பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து விளக்கம் அளித்த ஹைதராபாத் போலீஸ் கமிஷனர் ஏ.கே.கான், பாஸ்போர்ட்டை நாங்கள் முடக்கவில்லை. மாறாக, ஆய்வுக்காக எடுத்துச் சென்றுள்ளோம். ஆயிஷா சில தகவல்களைக் கூறியுள்ளார். அது உண்மையா என்பதை அறிவதற்காக பாஸ்போர்ட்டைப் பெற்றுள்ளோம்.
இந்த வழக்கில் சிலரைக் கைது செய்ய வேண்டும் என்ற அவசியம் ஏற்பட்டால் நிச்சயம் அதை செய்வோம். அதேசமயம், வழக்கின் போக்கு, கிடைக்கும் ஆதாரங்கள் இவற்றின் அடிப்படையில்தான் அது அமையும்.
இந்த வழக்கின் விசாரணை எப்போது முடியும் என்று கூற முடியாது. காரணம், எத்தனை பேரிடம் விசாரிக்க வேண்டும் என்பதே இன்னும் தெளிவாகவில்லை. உத்தேசமாக ஹைதராபாத்தில் மட்டும் கிட்டத்தட்ட 15 பேரிடம் சாட்சியம் பெற வேண்டியுள்ளது என்றார் கான்.
சோயப் மாலிக் குடும்பத்தினர் குழப்பம்
ஆயிஷா விவகாரம் தொடர்பாக ஹைதராபாத்தில் எழுந்துள்ள புதிய சூழ்நிலையைத் தொடர்ந்த தங்களது இநதிய வருகையில் மாற்றம் செய்துள்ளனர் சோயப் மாலிக்கின் குடும்பத்தினர்.
இதுகுறித்து சோயப் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் கூறுகையில், பாகிஸ்தான் அதிகாரிகளுடன் இதுதொடர்பாக சோயப் மாலிக்கின் குடும்பத்தினர் பேசி வருகின்றனர். அவர்களது இந்தியத் திட்டத்தில் மாற்றம் இருக்கும் என்றார்.
திருமணத்திற்காக நாளை சோயப் மாலிக்கின் குடும்பத்தினர் ஹைதராபாத் வருவதாக திட்டமிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
முன்ஜாமீன் மனு தாக்கல் இல்லை
இந்த நிலையில், முன்ஜாமீன் கோரும் திட்டத்தில் சோயப் மாலிக் இல்லை என்று அவரது வக்கீல் ரமேஷ் குப்தா கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ஹைதராபாத் போலீஸாருடன் நல்ல முறையில் ஒத்துழைத்து வருகிறார் சோயப். போலீஸாரும் நல்ல முறையில் விசாரணையை மேற்கொண்டுள்ளனர். எனவே முன்ஜாமீன் மனுவைத் தாக்கல் செய்யத் தேவையில்லை என்று சோயப் கூறியுள்ளார் என்றார் குப்தா.
ரமேஷ் குப்தா சீனியர் வக்கீல் ஆவார். ஏற்கனவே முன்னாள் கிரிக்கெட் வீரர் மனோஜ் பிரபாகர் கிரிக்கெட் சூதாட்ட வழக்கில் சிக்கியபோது அவருக்காக ஆஜரானவர் குப்தா என்பது நினைவிருக்கலாம். குப்தா டெல்லியைச் சேர்ந்த வழக்கறிஞர் ஆவார்.
-
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
பாஜக - தவெக கூட்டணி உருவாகிறதா? திமுகவை வீழ்த்த பம்பர் ஆஃபர் 60 சீட், மெகா பொறுப்பு? டெல்லி பலே மூவ் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
"இந்த" 2 பேருக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்.. டி20 உலக கோப்பை வெற்றிக்கு பின் கம்பீர் சொன்ன வார்த்தை -
கருணாஸ் பாஜகவுக்கு விட்ட சவால்.. "இந்து மதமே கிடையாது" அதிர்ச்சியில் உறைந்த இந்து முன்னணி! -
நாலாபக்கமும் நெருக்கடி.. பாஜக கூட்டணிக்கு வருகிறாரா விஜய்? நயினார் நாகேந்திரனே கொடுத்த பதில் -
பாஜக கூட்டணி வர்றீங்களா? இல்ல கடையை சாத்துறீங்களா? விஜய்க்கு டெல்லி டெட்லைன்.. சிபிஐ பிடியில் தவெக! -
விஜய்க்கு இரட்டை அதிர்ச்சி.. சினிமா, அரசியல் இரண்டிலும் ஒரே நாளில் விழுந்த பேரிடி












Click it and Unblock the Notifications