தமிழகத்தில் ஒவ்வொரு ஊராட்சியிலும் சமுதாய கூடம் கட்டப்படும்: மு.க.ஸ்டாலின்
சென்னை: நிதிநிலை அறிக்கையில் கூறப்பட்டுள்ள படி ஒவ்வொரு ஊராட்சியிலும் சமுதாய நலக் கூடங்கள் கட்டப்படும் என்று சட்டசபையில் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்தார்.
தமிழக சட்டசபையில் நேற்று கேள்வி நேரத்தின் போது, பெரம்பலூர் மாவட்டத்தில் சமுதாயக் கூடம் அமைப்பது தொடர்பாக வரகூர் அதிமுக எம்எல்ஏ சந்திரகாசி கேள்வி எழுப்பினார்.
இதுபற்றி அரசு பரிசீலிக்கவில்லை என்று அமைச்சர் தமிழரசி பதிலளித்தார். அப்போது சட்டசபை காங்கிரஸ் தலைவர் சுதர்சனம், 'ஒவ்வொரு ஊராட்சியிலும் ஒரு சமுதாயக் கூடம் அமைக்க அரசு முன்வர வேண்டும். திருமணம் நடத்த கஷ்டப்படும் ஏழைகளுக்கு இந்தக் கூடம் உதவிகரமாக இருக்கும். இதற்கு ரூ.350 கோடி தான் செலவாகும்' என்று கூறினார்.
அப்போது துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் குறுக்கிட்டு, 'இந்த ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் சுதர்சனத்தின் கேள்விக்கான பதில் அடங்கியுள்ளது.
ஒவ்வொரு ஊராட்சியிலும் சமுதாய நலக்கூடங்கள் கட்டப்படுமென்று அறிவிக்கப்பட்டுள்ளது. தேவையான இடத்தில் அவை கட்டித்தரப்படும்' என்று பதிலளித்தார்.












Click it and Unblock the Notifications