1, 6ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் மாதம் சமச்சீர் கல்வி திட்ட புத்தகங்கள் வழங்கப்படும் - அமைச்சர்
சென்னை: தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கு வரும் ஜுன் முதல் வாரத்தில் ஒன்று மற்றும் ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கு சமச்சீர் கல்விக்கான பாடப்புத்தகங்கள் வழங்கப்பட உள்ளது.
தமிழக சட்டசபையில் நேற்றைய கேள்வி நேரத்தின் போது இத்தகவலை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.
அமைச்சர் மேலும் கூறுகையில், 'தமிழகத்தில் இதுவரை 200 பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டு உள்ளன. மேலும் 200 பள்ளிகளை தரம் உயர்த்துவதற்கு மத்திய அரசிடம் தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது.
மாணவர்களிடம் நற்பண்புகளை ஏற்படுத்துவதற்காக, வரும் காலங்களில் நீதிபோதனை வகுப்புகளையும் கல்வி அட்டவணையில் இடம் பெறச் செய்வதற்கு வலியுறுத்தப்பட்டு உள்ளது.
ஒன்று மற்றும் 6ம் வகுப்புகளுக்கான சமச்சீர் கல்வி பாடப் புத்தகங்கள் அனைத்தும் தரமான ஆசிரியர்கள் மூலம் எழுதப்பட்டு, அச்சடிக்கப்பட்டு உள்ளன. ஏ4 அளவில் 8ஜிஎஸ்எம் தாளில் வெளிநாட்டு தரத்துடன் இந்த புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டுள்ளன.
வரும் ஜுன் முதல் வாரத்தில் பள்ளிகளுக்கு இந்தப் புத்தகங்கள் கொடுக்கப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications