நெல்லையில் பரிதாபம் – குடும்பத்தோடு நகைக் கடை அதிபர் தற்கொலை
திருநெல்வேலி: காதல் விவகாரத்தில் சிக்கி மகள் காணாமல் போனதாக அஞ்சிய நெல்லை நகைக்கடை அதிபர் தனது குடும்பத்துடன் விஷம் குடித்துத் தற்கொலை செய்து கொண்ட பரிதாபச் சம்பவம் நடந்துள்ளது.
நெல்லை மாவட்டம் ஏர்வாடி ராமகிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் ஜெயச்சந்திரன் (52). வள்ளியூரில் நகைக் கடை நடத்தி வந்தார். இவருத மனைவி இந்திரா. இவர்களுக்கு ஜெயப்பிரகாஷ் என்ற மகனும், நித்யாதேவி என்ற மகளும் உள்ளனர்.
நித்யாதேவி நெல்லையில் ஒரு கல்லூரியில் படித்து வந்தார். கடந்த 5ம் தேதியன்று தேர்வு எழுதுவதற்காக நித்யாதேவி கன்னியாகுமரி சென்றார். அதன் பிறகு அவர் வீடு திரும்பவில்லை.
இதனால் அதிர்ச்சி அடைந்தார் ஜெயச்சந்திரன். மகள் காதல் விவகாரத்தில் மாட்டி ஓடிப் போயிருக்கலாமோ என்று குழப்பமடைந்தார். இதனால் அவமானமாகி விடுமே என்று கவலைக்குள்ளான அவர் தனது மனைவி, மகனுடன் விஷம் குடித்து விட்டார்.
இதில் 3 பேரும் சிறிது நேரத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தனர். மூன்று பேரும் சயனைட் சாப்பிட்டுள்ளதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications