நக்சல்களை ஒழிக்க விமானப்படை தேவையில்லை: தளபதி பி.வி.நாயக்
டெல்லி: நக்சலைட்டுகளுக்கு எதிராக இந்திய விமானப் படையை பயன்படுத்துவது சரியானதாக இருக்காது என்று இந்திய விமானப் படை தளபதி பி.வி.நாயக் தெளிவு படுத்தி உள்ளார்.
சட்டிஸ்கர் மாநிலம் தாண்டேவாடா வனப்பகுதியில் சிஆர்பிஎப் வீரர்கள் சென்ற வாகனத்தின் மீது நேற்று மாவோயிஸ்ட் நக்சலைட்டுகள் கடும் தாக்குதல் நடத்தினர். இதில் 75 வீரர்கள் பலியானார்கள்.
மிகப்பெரிய தாக்குதலாக கருதப்பட்டதால், நக்சல்களுக்கு எதிராக ராணுவ நடவடிக்கை எடுக்கப்படுமா, அவர்கள் கட்டுப்படுத்த விமானப் படை பயன்படுத்தப்படுமா என்பது குறித்த கேள்விகள் எழுந்தன. இதுகுறித்து சட்டிஸ்கரில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், தேவைப்பட்டால் விமானப்படையை பயன்படுத்துவது குறித்து பரிசீலிக்கப்படும் என்றார்.
இதுகுறித்து விமானப் படை தளபதி பி.வி.நாயக் கூறுகையில்,
'அடிப்படையில் நக்சல்கள் நமது நாட்டின் குடிமக்கள். அவர்கள் மீது ராணுவத் தாக்குதல் நடத்துவதற்கு முன் பலமுறை யோசிக்க வேண்டியுள்ளது. 120 சதவீதம் அவர்கள் நமக்கு எதிரிகள் என உறுதிபடுத்தப்பட்ட பின்னரே விமானப்படை அவர்கள் மீதான தாக்குதல் நடத்த முடியும்.
மேலும், உள்நாட்டு அச்சுறுத்தலுக்கு விமானப் படையை பயன்படுத்துவது பொருந்தாது. நம்முடைய விமானப்படையின் திறன்கள் அனைத்தும் அண்டை நாட்டு எதிரிகளோடு போராடும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது' என்றார்.
உள்துறை அமைச்சக செயலாளர் ஜிகே பிள்ளையும் இதே கருத்தைத் தான் தெரிவித்துள்ளார். தற்போது நக்சல்களுக்கு எதிரான நடவடிக்கைகளை கையாள துணை ராணுவப்படையினரே போதுமானவர்கள் எனறு அவர் குறிப்பிட்டார்.
-
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன?












Click it and Unblock the Notifications