For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

போலி மருந்து வழக்கில் மேலும் 5 பேர் கைது

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: போலி மருந்து வழக்கில் மேலும் 5 மருந்து கடைக்காரர்கள் நேற்று கைது செய்யப்பட்டனர்.

தமிழகத்தில் வெடித்துக் கிளம்பியுள்ள காலாவதி மற்றும் போலி மருந்து வழக்குகளை சிபிசிஐடி போலீசார் விசாரிக்கிறார்கள். காலாவதி மருந்து வழக்கில் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 5 பேர் கோர்ட்டில் சரண் அடைந்துள்ளனர்.

போலி மருந்து வழக்கில் சென்னையை சேர்ந்த சீனிவாசன், ஹேமந்த்குமார், கும்பகோணத்தை சேர்ந்த கண்ணன் ஆகியோர் கைதானார்கள்.

இவர்களை தற்போது 6 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகிறார்கள். இந்நிலையில், போலி மருந்து வழக்கில் நேற்று மேலும் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

சென்னையின் பல்வேறு பகுதிகளில் மருந்து கடை நடத்தும் இவர்கள் சுனில்குமார் கோத்தாரி (38), கிரீஷ் (26), பதம்சந்த் (42), வெங்கடேசன் (34), வேலூரைச் சேர்ந்த அப்ரோஸ்கான் (23).

இவர்கள் 5 பேரும் நேற்று சென்னை எழும்பூர் 2வது கோர்ட்டில் மாஜிஸ்திரேட்டு ஸ்ரீதேவி முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் ஜெயிலில் அடைக்கும்படி மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். பின்னர் ஐந்து பேரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X