போலி மருந்து வழக்கில் மேலும் 5 பேர் கைது
சென்னை: போலி மருந்து வழக்கில் மேலும் 5 மருந்து கடைக்காரர்கள் நேற்று கைது செய்யப்பட்டனர்.
தமிழகத்தில் வெடித்துக் கிளம்பியுள்ள காலாவதி மற்றும் போலி மருந்து வழக்குகளை சிபிசிஐடி போலீசார் விசாரிக்கிறார்கள். காலாவதி மருந்து வழக்கில் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 5 பேர் கோர்ட்டில் சரண் அடைந்துள்ளனர்.
போலி மருந்து வழக்கில் சென்னையை சேர்ந்த சீனிவாசன், ஹேமந்த்குமார், கும்பகோணத்தை சேர்ந்த கண்ணன் ஆகியோர் கைதானார்கள்.
இவர்களை தற்போது 6 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகிறார்கள். இந்நிலையில், போலி மருந்து வழக்கில் நேற்று மேலும் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
சென்னையின் பல்வேறு பகுதிகளில் மருந்து கடை நடத்தும் இவர்கள் சுனில்குமார் கோத்தாரி (38), கிரீஷ் (26), பதம்சந்த் (42), வெங்கடேசன் (34), வேலூரைச் சேர்ந்த அப்ரோஸ்கான் (23).
இவர்கள் 5 பேரும் நேற்று சென்னை எழும்பூர் 2வது கோர்ட்டில் மாஜிஸ்திரேட்டு ஸ்ரீதேவி முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் ஜெயிலில் அடைக்கும்படி மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். பின்னர் ஐந்து பேரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.












Click it and Unblock the Notifications