சட்டிஸ்கர் சிஆர்பிஎப் முகாம் மீது மீண்டும் நக்சலைட் தாக்குதல்
Subscribe to Oneindia Tamil

தான்டேவாடா மாவட்டம், முக்ரானா வனப்பகுதியில், நேற்று முன்தினம் நக்சலைட்கள் நடத்திய வெறித்தனமான தாக்குதலில் 76 சிஆர்பிஎப் ஜவான்கள் உயிரிழந்தனர்.
இந்த நிலையில் நேற்று மீண்டும் அதே தான்டேவாடா மாவட்டத்தில் நக்சலைட்டுகள் சிஆர்பிஎப் முகாம் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
பலம்பள்ளி என்ற கிராமத்தில் சிஆர்பிஎப் முகாம் உள்ளது. நேற்று இங்கு வந்த நக்சலைட்டுகள் முகாம் மீது நான்கு ரவுண்டு துப்பாக்கிச் சூடு நடத்தினர். பதிலுக்குப் படையினரும் திருப்பிச் சுட்டதைத் தொடர்ந்து நக்சலைட்டுகள் ஓடி விட்டனர்.
இதுகுறித்து மாநில டிஜிபி விஸ்வ ரஞ்சன் கூறுகையில் இது அசாதாரணமானது அல்ல, அடிக்கடி இதுபோல நக்சலைட்டுகள் செய்வது வழக்கம். ஜவான்கள் திருப்பித் தாக்கியதும் நக்சலைட்டுகள் ஓடி விட்டனர். உயிர்ச்சேதம் ஏதும் இல்லை என்றார்.












Click it and Unblock the Notifications