புனே குண்டுவெடிப்புக்குக் காரணமான சதிகாரன் அடையாளம் தெரிந்த்து

Subscribe to Oneindia Tamil

Pune blast
மும்பை: புனே நகரில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் தொடர்புடைய ஒரு நபரின் அடையாளம் தெரிய வந்துள்ளது.

புனேவில் உள்ள கோரேகான் பார்க் பகுதியில், கடந்த பிப்ரவரி மாதம் 13ம் தேதி ஜெர்மன் பேக்கரியில் பயங்கர குண்டுவெடிப்புச் சம்பவம் நடந்த்து. இதில் 17 பேர் கொல்லப்பட்டனர்.

இந்த சம்பவத்தை இந்தியன் முஜாஹிதீன் தீவிரவாதிகள் நிகழ்த்தியதாக சந்தேகிக்கப்படுகிறது. இதில் ஈடுபட்டவர்கள் இதுவரை அடையாளம் காணப்படாமல் இருந்தனர்.

இந்த நிலையில் ஒரு சதிகாரனின் அடையாளம் தெரிய வந்துள்ளது. அந்த நபரின் பெயர் யாசின் பத்கல். இந்தியன் முஜாஹிதீன் நிறுவனர் ரியால் பத்கலின் உறவினர் இவர் என்று நம்பப்படுகிறது.

சதிகாரர்களில் யாசினும் ஒருவர் என்று மகாராஷ்டிர தீவிரவாதத் தடுப்புப் பிரிவு போலீஸார் தெரிவித்துள்ளனர்.

குண்டுவெடிப்பு தொடர்பாக மகாராஷ்டிர தீவிரவாதத் தடுப்புப் பிரிவு போலீஸார் முதல் கட்ட விசாரணை அறிக்கையை சமர்ப்பித்துள்ளனர். அதில்தான் யாசினுக்கு இதில் தொடர்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாசின், கர்நாடக மாநிலம் பத்கல் நகரைச் சேர்ந்தவர். இவரைப் பிடிக்கும் முயற்சிகள் தீவிரப்படுத்தப்பட்டள்ளதாகவும் மகாராஷ்டிர தீவிரவாதத் தடுப்புப் பிரிவு போலீஸார் ஈடுபட்டுள்ளனராம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+