மான்கறி டாக்டர் விஜயக்குமாரின் 2 உறவினர்கள் கைது
சென்னை: மான்கறி வைத்தியம் பார்ப்பதாகக் கூறி நோயாளிகளிடம் பண மோசடி செய்த டாக்டர் விஜயகுமாரின் உறவினர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை மயிலாப்பூரில் திருவிதாங்கூர் ராஜவைத்தியசாலை என்ற பெயரில் மருத்துவமனை நடத்தி வந்தவர் விஜயகுமார்.
இவர் தன்னிடம் வரும் நோயாளிகளிடம் மான்கறி வைத்தியம் செய்வதாக சொல்லி லட்சக்கணக்கில் பணம் வசூலித்து வந்தார்.
புகாரின் பேரில் விஜயகுமார் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். குண்டர் சட்டத்தின் கீழ் 1 ஆண்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
விஜயகுமாரின் மகன் ஜெகதீஷ்குமார், மருமகள் அனிதா ஆகியோர் மீதும் புகார் வந்தது. அவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். ஆனால் இருவரும் தலைமறைவாகி விட்டனர்.
அவர்களை போலீசார் தேடி வரும் நிலையில், இருவருக்கும் அடைக்கலம் கொடுத்ததாக ஜெகதீஷ்குமாரின் மாமியார் சுஜாதா, மைத்துனர் புதிர்குமார் ஆகிய இருவரும் நேற்று கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலில் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.












Click it and Unblock the Notifications