அரசு ஊழியர்கள் இனி மனைவியிடம் சம்பள விவரத்தை மறைக்க முடியாது!

Subscribe to Oneindia Tamil

RTI
அரசு உத்தியோகம் பார்க்கும் சில கணவர்கள் தங்களின் சம்பளம் எவ்வளவு, பிடித்தம் எவ்வளவு என்ற விவரங்கள் எதையும் மனைவிகளுக்குத் தெரிவிக்க விரும்புவதே இல்லை. சம்பளம் என்பது தங்கள் தனிப்பட்ட விஷயம், அது மனைவிக்குத் தெரிந்து என்ன ஆகப்போகிறது? என்ற நினைப்பு அவர்களுக்கு.

இதை நினைத்து பல மனைவிகள் மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள். இனி அதற்கெல்லாம் அவசியம் இருக்காது.

காரணம் திருமணமான பிறகு சம்பளம் என்பது ஒரு ஆணின் தனிப்பட்ட விஷயமல்ல... மனைவிக்கும் தெரிந்திருக்க வேண்டிய சமாச்சாரம் என்ற நிலை வந்துவிட்டது. எனவே இனி சம்பள விவரத்தை மறைக்கும் கணவர்களின் மனைவிகள் தகவல் அறியும் உரிமையைப் பயன்படுத்தி தெரிந்து கொள்ளலாம்.

இது தொடர்பில் சமீபத்தில் நடந்த ஒரு சம்பவம்...

காஷ்யப் என்பவர் தென்கிழக்கு மத்திய ரயில்வேயில் பணியாற்றுகிறார். இவருக்கு சிவகுமாரி என்ற மனைவி உள்ளார். ஆனால் காஷ்யப் தனது அலுவலக சர்வீஸ் புத்தகத்தில் இரண்டாவது மனைவியின் பெயரை அரசுக்கு தந்துள்ளார். மேலும் முதல் மனைவியை கொடூரமாகவும் நடத்தியுள்ளார்.

காஷ்யப்பின் சம்பளம் உள்ளிட்ட விவரங்கள் மற்றும் சர்வீஸ் புத்தகத்தின் பிரதியை சிவகுமாரி கேட்டதற்கு தர மறுத்துவிட்டதாம் ரயில்வே நிர்வாகம். உடனே அவர் தகவல் அறியும் உரிமையின் கீழ் பொது தகவல் அலுவலர் அன்னபூர்ணா தீட்சித்தை அணுகியுள்ளார்.

முழுமையாக விசாரித்த அன்னப்பூர்ணா, முதல் மனைவி உயிருடன் இருக்கும்போதே காஷ்யப் இரண்டாவது திருமணம் செய்து கொண்டதையும் அறிந்து கொண்டார். பின்னர் காஷ்யப்பின் சம்பள விவரம் மற்றும் சர்வீஸ் புத்தகம் போன்றவற்றின் நகல்களை வரும் ஏப்ரல் 10-ம் தேதிக்குள் சிவகுமாரிக்குத் தந்துவிட வேண்டும் என்று உத்தரவிட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+