சானியா கல்யாணத்தில் தொடரும் குழப்பம்- ஏப்.15ம் தேதிதான் நடைபெறும் என அறிவிப்பு
ஹைதராபாத்: சானியா மிர்ஸா, சோயப் மாலிக் திருமணத்தில் தொடர்ந்து குழப்பங்கள் நிலவி வருகிநறன. நேற்று இரவு திருமணம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மீண்டும் ஏப்ரல் 15ம் தேதிக்கே திருமணத்தை மாற்றியுள்ளனர்.
சானியா – சோயப் மாலிக் திருமணம் அறிவிக்கப்பட்டது முதலே பல்வேறு குழப்பங்கள் தொடங்கி விட்டன. ஆயிஷா பிரச்சினை அதில் பெரிதாக இருந்த்து. அந்தப் பிரச்சினை முடிவடைந்த நிலையில் திட்டமிட்டபடி ஏப்ரல் 15ம் தேதி திருமணம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
திருமணத்திற்காக சோயப் மாலிக்கின் குடும்பத்தினரும் ஹைதராபாத் வந்து சேர்ந்தனர். இந்த நிலையில் நேற்று இரவு 7 மணிக்குத் திருமணம் நடைபெறும் என திடீரென அறிவிக்கப்பட்டது. சானியா வீட்டில் வைத்து எளிமையான முறையில் திருமணம் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டது. காஜி அஸ்மதுல்லா ஜாப்ரி திருமணத்தை உறுதி செய்வார் என்றும் அறிவிக்கப்பட்டிருந்த்து.
ஆனால் திட்டமிட்டபடி நேற்று திருமணம் நடைபெறவில்லை. சோயப் மாலிக் தனது பாஸ்போர்ட், ஹைதராபாத் போலீஸார் தன் மீது தொடர்ந்த வழக்குகளை முடித்து விட்டது தொடர்பான ஆவணங்கள் உள்ளிட்டவற்றை நேற்று தாக்கல் செய்யவில்லை. இதையடுத்து திருமணத்தை நடத்த முடியாது என்று காஜி தரப்பில் கூறப்பட்டு விட்டதாம்.
ஆயிஷா கொடுத்த புகாரின் பேரில் சோயப்பை சானியா வீட்டில் வைத்து விசாரித்த போலீஸார் அவரது பாஸ்போர்ட்டை பறிமுதல் செய்து எடுத்துச் சென்றனர். இன்னும் அது திருப்பித் தரப்படவில்லை என்று தெரிகிறது. இதனால்தான் நேற்று திருமணத்தை நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டு விட்டதாம்.
தற்போது பழையபடி ஏப்ரல் 15ம் தேதியன்றே திருமணம் நடைபெறும் சானியா தரப்பில் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications