ஷார்ஜா- மரணதண்டனை பெற்ற 17 இந்தியர்களின் அப்பீல் மே 19ல் விசாரணை

Subscribe to Oneindia Tamil

துபாய்: துபாயில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 17 இந்தியர்கள் சார்பாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு மனு வரும் மே 19ம் தேதி விசாரணைக்கு வருகிறது.

ஷார்ஜாவில் மது கடத்தல் தொடர்பாக எழுந்த பிரச்னையில் ஒரு பாகிஸ்தானியர் கொல்லப்பட்ட வழக்கில் 17 இந்தியர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

இவர்கள் 17 பேரில் 16 பேர் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். ஒருவர் ஹரியானாவைச் சேர்ந்தவர்.

மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ள இந்த 17 இந்தியர்கள் மேல் முறையீடு செய்து தண்டனையில் இருந்து தப்புவதற்கான வாய்ப்புகள் குறித்து இந்திய வெளியுறவு அதிகாரிகள் ஆலோசனை வழங்கினார்கள்.

அமீரக நிர்வாகமும், குற்றம் சாட்டப்பட்ட 17 இந்தியர்களும் மேல்மூறையீடு செய்யலாம் அறிவித்தது.

இந்நிலையில், ஷார்ஜா நீதிமன்றத்தில் 17 பேர் சார்பிலும் மேல் முறையீட்டு மனு கடந்த புதன் கிழமை தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையி்ல இம்மனு மீதான விசாரணை வரும் அடுத்த மாதம் மே 19ம் தேதி விசாரணைக்கு வரும் என இந்தியர்கள் தரப்பில் ஆஜராகும் வக்கீல்கள் தெரிவித்தனர்.

இந்த வழக்கில் ஆஜராக துபாயில் உள்ள முகமது சல்மான் வழக்கறிஞர்கள் மற்றும் சட்ட ஆலோசனை நிறுவனத்தை இந்திய தூதரகம் ஏற்பாடு செய்துள்ளது.

சட்ட ஆலோசனை நிறுவனத்தைச் சேர்ந்த வக்கீல் பிந்து சுரேஷ் செத்தூர் இத்தகவலை தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+