சித்திரை மாதப் பிறப்பு: ஜெயலலிதா-வைகோ வாழ்த்து
சென்னை: சித்திரை மாதப் பிறப்பையொட்டி அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
நாளை விக்ருதி ஆண்டு பிறக்கிறது. இதையொட்டி ஜெயலலிதா விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், மலர இருக்கும் விக்ருதி ஆண்டு அனைவருக்கும் வளம் கொழிக்கும் ஆண்டாகவும், வளர்ச்சியையும், வெற்றிகளையும் வழங்கும் ஆண்டாகவும் விளங்கும்!
இனிமையும், மகிழ்ச்சியும் பொங்கும் ஆண்டாக இந்தப் சித்திரை திருநாள் விளங்க வேண்டும் என்ற என்னுடைய விருப்பத்தினைத் தெரிவித்து சித்திரை திருநாளை கொண்டாடும் எனதருமை தமிழ் மக்கள் அனைவருக்கும் என் இனிய நல்வாழ்த்துக்களை மீண்டும் ஒரு முறை உரித்தாக்கிக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், மக்கள் அனைவருக்கும் சித்திரைத் திருநாள் சிறப்புகள் சேர்க்க என் இதய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications