மேற்கு வங்கத்தை தாக்கிய சூறாவளி-31 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம் வடக்கு திங்காபூர் மாவட்டத்தை பயங்கர வீசிய சூறாவளி காற்று தாக்கியது. இதில் 31 பேர் வரை பலியாகிவிட்டனர். ஆயிரக்கணக்கான வீடுகள் சேதமடைந்துள்ளன.
கடும் கோடை நிலவி வரும் நிலையில் நேற்றிரவு மேற்கு வங்கத்தில் பயங்கர சூறாவளிக் காற்று வீசியது.
இதில் மேற்கு திங்காபூர் மாவட்டம் பலத்த சேதத்தை சந்தித்துள்ளது.
இந்த சூறாவளியால் 50,000 வீடுகள் வரை சேதமடைந்துள்ளன. பல வீடுகள் அடியோடு உடைந்து போயின. இதில் 31 பேர் வரை பலியாகிவிட்டனர்.
மாவட்டத்தின் அனைத்து தொலைத் தொடர்பு வசதிகளும் துண்டிக்கப்பட்டுள்ளன. இதனால் சேதம் குறித்த முழு விவரங்கள் கிடைக்கவில்லை.












Click it and Unblock the Notifications