ஐபிஎல் உரிமையாளர்களை கண்காணிக்கும் வருமான வரித்துறை

தற்போது நடந்து வரும் 3வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளின் மூலம் சுமார் ரூ. 4 ஆயிரத்து 500 கோடிக்கு மேல் ஐபிஎல் அணிக்கு வருமானம் கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் மூலம் மத்திய வருமான வரித்துறைக்கு நேரடி மற்றும் மறைமுக வரியாக ரூ.300 கோடி வரை கிடைக்க வேண்டும்.
ஆனால் அணி உரிமையாளர்கள் சிலர் வரி ஏய்ப்பில் ஈடுபடுவதாக புகார்கள் வெளியாகி வருகின்றனர். இதனால், வருமான வரித்துறையினர் இதை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
ஐபிஎல் உரிமையாளர்களை வருமான வரித்துறை வருவாய் புலனாய்வு பிரிவு, விசாரணை பிரிவு, அமலாக்கப்பிரிவு, ஆகியவை தனித்தனியாக கண்காணித்து வருகின்றன.
ஐபிஎல் அணி உரிமையாளர்கள் சிலருடைய பெயர் மட்டுமே வெளிப்படையாக தெரிகிறது. ஒவ்வொரு அணியிலும் பல பங்குதாரர்கள் உள்ளனர். அவர்களில் வெளிநாடுகளில் தொழில் அதிபர்களாக இருக்கும் பலரும் உள்ளனர்.
அணிகளுக்கு எந்தெந்த வகையில் வருமானம் வருகிறது. அந்த அணி உரிமையாளர்கள் எப்படி பிரித்து கொள்கிறார்கள் என்பதில் முறையான கணக்குகள் காட்டப்படுவது இல்லை.
எனவே இந்த முறை வரி ஏய்ப்பு எதுவும் நடந்து விடாமல் தடுக்க வருமான வரித்துறையினர் அனைத்து முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளையும் செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications