நெல்லை பைபாஸ் சாலையில் இன்சுலின் ஊசி குவியல்!
நெல்லை: நெல்லையில் சாலையின் சுமார் அரை கிலோ மீட்டர் தூரத்திற்கு இன்சுலின் ஊசிகள் குவியலாக கொட்டப்பட்டிருந்தன.
தமிழகத்தில் காலாவதி மருந்து விவகாரம் வெடித்துக் கிளம்பயதை அடுத்து பல்வேறு பகுதிகளிலும் சுகாதாரத் துறை அதிகாரிகள் அதிரடி சோதனைகள் நடத்தி வருகின்றனர்.
அதிகாரிகளின் அதிரடி ரெய்டுக்கு பயந்து ஆங்காங்கே மருந்து கடைக்காரர்கள் மற்றும் மருத்துவமனை நிர்வாகங்கள் தங்களிடம் உள்ள காலாவதி மருந்துகளை உடனுக்குடன் அப்புறப்படுத்தி வருகின்றனர்.
பல இடங்களில் மருந்துகள் குவியல் குவியலாக குப்பைகளில் கொட்டப்பட்டும், தீ வைத்து எரிக்கபட்டும் வருகின்றன. மருந்து மட்டுமல்லாது, மருந்துக்கடைகளில் கிடைக்கும் இதர பொருட்களின் காலாவதி தேதியையும் அதிகாரிகள் சோதனையிட்டு வருகின்றனர்.
குளுக்கோஸ், ஊசி உள்ளிட்ட பல்வேறு பொருட்களும் காலாவதி தேதியைத் தாண்டியிருந்தால் சம்பந்தப்பட்டவர்களுக்கு தண்டனை கட்டாயம் உண்டு என்னும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், நெல்லை வண்ணார்பேட்டை தெற்கு பைபாஸ் ரோட்டின் மேல்பகுதியில் பாலம் வரை ரோட்டோரங்களில் நேற்று மாலை இன்சுலின் ஊசி போடப்படும் சிரிஞ்சுகள் ஆயிரக்கணக்கில் கொட்டப்பட்டிருந்தன.
சாலைகளில் செல்வோர் கால்களில் குத்தும் படியாக ஊசிகள் அதிகமாக கிடந்ததால் பொதுமக்கள் மாநகராட்சிக்கு தகவல் தெரிவித்தனர். மாநகராட்சி துப்பரவு பணியாளர்கள் உடனடியாக சம்பவ இடம் வந்து ஊசிகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்












Click it and Unblock the Notifications