ராமதாஸ்-அன்புமணி மீதான வழக்குகளை வாபஸ் பெற வேண்டும்-பாமக
சென்னை: டாக்டர் ராமதாஸ், அன்புமணி மீது போடப்பட்ட பொய் வழக்குகளை வாபஸ் பெற வேண்டும் என்று பாமக எம்.எல்.ஏ. தமிழரசு சட்டசபையில் கோரிக்கை விடுத்தார்.
சட்டசபையில் சட்டத்துறை மானிய கோரிக்கைகள் மீது நடந்த விவாதத்தில் பேசிய அவர் மெட்ராஸ் என்பது சென்னையாகி பல ஆண்டுகளாகிவிட்டது. ஆனால் இன்னும் 'மெட்ராஸ் ஐகோர்ட்' என்று பெயர் பலகை உள்ளது. இதனை மாற்ற வேண்டும். உயர்நீதிமன்றத்தில் தமிழ் வழக்கு மொழியாக்கப்பட வேண்டும். விரைவு நீதிமன்றங்களை நியமிக்க வேண்டும். உயர்நீதிமன்றத்தில் வன்னியர் ஒருவர் தான் நீதிபதியாக இருக்கிறார். 5 ஆண்டுகளில் 20 பேர் நியமிக்கப்பட்டுள்ளதில் எத்தனை வன்னியர்கள் பரிந்துரை செய்யப்பட்டனர்?.
சட்டத்தின் வழியாகயின்றி அதிகாரவரம்பில் இருப்பவர்கள் தூண்டுதலால் வழக்குகள் பதிவு செய்யப்படுகிறது. கூட்டுறவு தேர்தலின் போது கொலை முயற்சி வழக்கும், மற்றொருவரிடம் வேண்டுமென்றே புகார் பெறப்பட்டு வன்கொடுமை சட்டத்திலும் என் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதோடு தேர்தலின் போது டாக்டர் ராமதாஸ், அன்புமணி உள்பட எம்.எல்.ஏக்கள், கட்சி நிர்வாகிகள் மீதெல்லாம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவைகளையெல்லாம் வாபஸ் பெற வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications